சென்னை: இந்தியாவில் தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.சாலைகளில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் நாம் கண் கூட பார்க்கிறோம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வாகன விற்பனையாளர் சங்கம், பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் பயணியர் வாகன விற்பனை அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கம் மாதந்தோறும் நாடு முழுவதும் நடந்த வாகன விற்பனை விவரங்களை வெளியிடும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் விற்பனையான பயணியர் வாகனம், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் தரவுகளை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தமாக பிப்ரவரி மாதத்தில் 22.94 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வாகன விற்பனை துறை பாசிட்டிவாக இருப்பதை இது காட்டுகிறது என இந்திய வாகன விற்பனையாளர் சங்க தலைவர் வினோத் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் 11% உயர்வு: கடந்த 2023 பிப்ரவரியில் வாகன தயாரிப்பாளர்கள் 3.34 லட்சம் பயணியர் வாகனங்களை முகவர்களுக்கு தயாரித்து வழங்கியிருந்தனர், இதுவே 2024 பிப்ரவரி மாதத்தில் 3.70 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% உயர்வு. எஸ்யூவி வகை வாகனங்களின் தொடர் தேவை காரணமாக பயணியர் வாகனங்கள் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பிப்ரவரியில் பதிவு செய்துள்ளதாக இந்திய வாகன விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் முந்தைய ஆண்டு பிப்ரவரி விட வளர்ச்சி கண்டிருக்கின்றன. அதே வேளையில் வர்த்தக வாகனங்கள் விற்பனை சிறிதளவு சரிவை கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டூவீலர் விற்பனை 34.6% உயர்வு: குறிப்பாக இரு சக்கர வாகன விற்பனை 34.6% உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 15.2 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வாகன விற்பனையாளர் சங்கம், மாருதி சுசுகி நிறுவனம் தான் அதிக கார்களை விற்பனை செய்து நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
மாருதி சுசுகி: பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி கார் 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 50,000 கார்களை விற்பனை செய்துள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் 42,000 கார்களையும், கியா மோட்டார்ஸ் 20,200 கார்களையும் பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்துள்ளன.
ஆட்டோமொபைல்: இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மீண்டெழுந்து வந்து, வளர்ச்சியை காட்டுவதாக கூறும் நிபுணர்கள், பிப்ரவரியில் கார் விற்பனை அதிகரித்திருப்பதை இதற்கு உதாரணமாக கூறுகின்றனர். வரும் காலங்களிலும் வளர்ச்சி அடைந்து வரும் துறையாகவே ஆட்டோமொபைல் துறை நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Article Written By: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications