டெல்லி: இந்தியாவில் மருத்துவ செலவினங்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் மருத்துவ காப்பீடு திட்டங்களே இந்த செலவுகளில் இருந்து நம்மை காக்கும் பாதுகாவலனாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது அரசு சார்பாக மருத்துவ காப்பீடு திட்டங்கள் வழங்கப்படுகின்றன, தனியார் நிறுவனங்களும் மருத்துவ காப்பீடுகளை வழங்குகின்றன.
மருத்துவ காப்பீட்டில் நாம் இரண்டு முறைகளில் காப்பீடு தொகை பெற முடியும். ஒன்று Cashless எனப்படும் முறை இதில் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் நாம் சிகிச்சை பெறும்போது நம்முடைய இன்சூரன்ஸ் கார்டினை காட்டினால் மட்டுமே போதும் எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டியதில்லை. இரண்டாவது நாம் பணத்தை செலுத்தி விட்டு பின்னர் காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்வது.

சில மருத்துவமனைகளில் நாம் சிகிச்சை பெற்று விட்டு அந்த ரசீதுகளை காட்டி விண்ணப்பம் செய்து காப்பீடு தொகை பெற முடியும். இவ்வாறு காப்பீடு கிளைம்களுக்காக நாம் விண்ணப்பம் செய்தால் உடனடியாக நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும் . இந்த காத்திருப்பு காலத்தை குறைக்க வேண்டும் என அரசு திட்டமிட்டு இருக்கிறது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் என ஐஆர்டிஏஐ 2047 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீடு என்ற இலக்கை நோக்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக காப்பீடு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக காப்பீடு தொகையை வழங்குவதற்கும், க்ளைம் நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி ஒரு தொழில் முறை முகமையை அமைத்து காப்பீடு க்ளைம்களுக்கான செயல்முறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை எளிமையாக்குவதற்கு ஐஆர்டிஏஐ முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அனைத்து பாலிசிதாரர்களும் சீராகவும் வேகமாகவும் தங்களுடைய உரிமை கோரல்களை விண்ணப்பம் செய்து காப்பீடு தொகையை பெற முடியும். அதாவது இன்சூரன்ஸ் துறையில் பிஐஎஸ் வகையிலான ஒரு தர நிர்ணயத்தை கொண்டு வர வேண்டும் என்பதே ஐஆர்டிஏஐ யின் திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2024 நிலவரப்படி இந்தியாவில் நிலுவையில் இருக்கும் க்ளைம்களின் எண்ணிக்கை 25 மில்லியன் . இது 2022ஆம் ஆண்டில் 8.5 மில்லியன் ஆகவும் 2023ஆம் ஆண்டில் 17.5 மில்லியன் ஆகவும் இருந்தது.
இந்தியாவில் மருத்துவ காப்பீடு பெறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் காப்பீடு கவரேஜ் என்பது அனைத்து சிகிச்சைகளுக்கும் வழங்கப்படுவது கிடையாது. இந்த சூழலில் தான் காப்பீடு துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக காப்பீட்டு நிறுவனங்கள் கேஷ்லெஸ் க்ளைம் கோரிக்கைகளை ஒரு மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் இது சம்பந்தப்பட்ட இறுதி கிளைம் செட்டில்மெண்டை 3 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications