டெல்லி: 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளியை சிபிஐ அதிகாரிகள் நாடு கடத்தி கைது செய்துள்ளனர். 25 ஆண்டுகளாக சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த மோனிகா கபூரை சிபிஐ எப்படி கைது செய்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த மோனிகா கபூர்?: 1990களில் டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு மோனிகா ஓவர்சீஸ் என்று நிறுவனத்தை நடத்தி வந்தவர் தான் மோனிகா கபூர். இவர் நகை ஏற்றுமதி இறக்குமதிக்காக போலியான ஆவணங்களையும் ரசீதுகள் மற்றும் வங்கி சான்றிதழ்களை தயாரித்துள்ளார். இதன் மூலம் வரியே இல்லாமல் தங்கத்தை இறக்குமதி செய்யும் உரிமத்தை இவர் பெற்றுள்ளார்.

என்ன மோசடி?: மோனிகா கபூரின் இந்த மோசடிக்கு அவருடைய சகோதரர்களான ராஜா கண்ணா மற்றும் ராஜீவ் கண்ணா ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர். தங்கம் மற்றும் பிற மூலப் பொருட்களை வெளிநாடுகளிடமிருந்து இவர்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்துள்ளனர். எந்தவித வரியும் செலுத்தாமல் 2.36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு மோனிகா கபூர் இறக்குமதி செய்திருக்கிறார் .
அரசுக்கு எவ்வளவு இழப்பு? : இதன் பின்னர் இந்த உரிமங்களை அகமதாபாத்தை சேர்ந்த டீப் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் அதிக விலைக்கு இவர் விற்பனை செய்திருக்கிறார். அந்த நிறுவனம் அரசு வழங்கிய உரிமத்தை பயன்படுத்தி வரியே இல்லாமல் கோடிக்கணக்கிலான மதிப்பு கொண்ட தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது. மோனிகா கபூர் செய்த இந்த மோசடியால் இந்திய அரசுக்கு 1.4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா தப்பிய மோனிகா : இது தொடர்பாக வழக்குப்பதியப்பட்டது, இந்நிலையில் 1999ஆம் ஆண்டு மோனிகா கபூர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றார். அங்கே நியூயார்க்கில் அவர் தஞ்சமடைந்தார். இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணை 2002ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி 2004 ஆம் ஆண்டு மோனிகா கபூர் மற்றும் அவருடைய சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
ரெட் கார்னர் நோட்டீஸ்: 2007ஆம் ஆண்டு மோனிகா கபூர் பொருளாதார குற்றவாளியாகவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது . அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருந்த நிலையில் அவரை அங்கிருந்து நாடு கடத்துவதற்கு சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பின் கைது: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தை நாடினர். 2010ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடந்தது. 2012ஆம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றம் மோனிகா கபூரை நாடு கடத்த அனுமதித்தது. ஆனால் அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். அவரது முறையீடு ஏற்று கொள்ளப்படவில்லை நியூயார்க் நீதிமன்றம் மீண்டும் அவரை நாடு கடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது மோனிகா கபூர் அமெரிக்காவில் இருந்து டெல்லி வரவழைகப்பட்டு டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications