டெல்லி: ரயில்வே துறை அடுத்த மார்ச் 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும், அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இதற்கான டெண்டர்களை இந்திய ரயில்வே கொண்டுள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ் கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய யாதவ், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள 503 ரயில் நிலையங்களில் இதுவரை சிசிடிவிக்களை பொருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமாராக்களை பொருத்துவதற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாயை ரயில்வே துறை பெற்றுள்ளது என்றும் யாதவ் கூறியுள்ளார். மேலும் 6,100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 58.600 பெட்டிகளில் சிசிடிவி கேமாராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் 2000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் யாதவ் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை அடையாளம் காண ரயில்வே துறைக்கு இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்றும் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் தனியுரிமை பிரச்சனைகள் மற்றும் பயணிகளின் கண்கானிப்பு குறித்து விளக்கம் அளித்த யாதவ், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொதுவான இடங்களில் பொருத்தப்படும் என்றும் யாதவ் கூறியுள்ளார்,. எனினும் இது பயணிகளின் தனியுரிமைகளில் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரயில்வேயின் சரியான நேரத்தை பற்றி பேசிய யாதவ், 690 சதவிகித என்ஜின்கள், ரியல் டைம் தகவல் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தானியங்கி விளக்கப்படம் தயாரித்தல் மற்றும் பயணிகள் ரயில் தகவல்களுக்காக, இஸ்ரோவுடன் இணைந்து ஆர்டிஐஎஸ் வேகமாக கண்கானிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை நாங்கள் ஆர்டிஐஎஸ் அமைப்பை 2,700க்கும் மேற்பட்ட மின்சார என்ஜின்கள் மற்றும் 3,800 டீசல் என்ஜின்களில் நிறுவியுள்ளோம் என்றும் யாதவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே உற்பத்தி பிரிவுகள் தனியார் மயமாக்கும் கேள்விக்கு பதிலளித்த யாதவ், அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிபடுத்தியுள்ளார். நாங்கள் ரயில்வேயை தனியார்மயமாக்க போவதில்லை. ஆனால் நாங்கள் நிறுவனமயமாக்கல் குறித்து விவாதங்களை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications