மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் கெசட்டில் அல்லாத லட்ச கணக்கான ஊழியர்களுக்கு 2020-21 நிதியாண்டுக்கு 78 நாள் சம்பளத்தைப் போனஸ் (productivity-linked bonus) ஆக அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் போன்ஸ் ஆர்பிஎப் மற்றும் ஆர்பிஎஸ்எப் பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு மூலம் சுமார் 11.59 லட்சம் ரயில்வே ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் பலன் அடைவார்கள் என்று மத்திய அமைச்சரான அனுராங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இந்த 78 நாள் சம்பளம் போனஸ் மூலம் மத்திய அரசுக்கு 1,985 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கூடுதல் செலவாகும்.
ரயில்வே ஊழியர்களுக்குப் போனஸ்
மத்திய அரசு பொதுவாக ரயில்வே துறை ஊழியர்களுக்கான இந்த productivity-linked bonus அளவீட்டைத் தசரா பண்டிகையின் போது தான் அறிவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் நாடாளுமன்றத்தில் இந்தப் போனஸ் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
productivity-linked bonus என்றால் என்ன..?
இந்திய அரசு முதன்முதலாக கையில் இருந்த துறை இந்திய ரயில்வே துறை, இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ரயில்வே துறை முக்கிய உள்கட்டமைப்பாக இருக்கும் என நம்பியது.
இந்தச் சூழ்நிலையில் தான் ரயில்வே துறை ஊழியர்களுக்குப் போன்ஸ் அளிக்க முற்பட்ட போது 'The Payment of Bonus Act -1965' ரயில்வே துறைக்குப் பொருந்தாது என உணர்ந்து, இதே போனஸ் தொகையை மாற்று வழியில் அளிக்க வேண்டும் என்பதற்காக productivity-linked bonus கான்செப்ட்-ஐ 1979-80 ல் அறிமுகம் செய்யப்பட்டது.
பார்முலா
இந்தப் போனஸ் அளிக்க 23.9.2000ல் நடந்த கூட்டத்தில் ஒரு பார்முலா உருவாக்கப்பட்டது. இந்தப் பார்முலாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் பின் 2012-13ல் 6வது சம்பள கமிஷன் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து அன்று முதல் இன்று வரையில் இந்தப் பார்முலா வாயிலாகவே கணக்கிட்டுப் போனஸ் அளிக்கப்பட்டு வருகிறது.
17,951 ரூபாய்
மேலும் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 78 நாள் சம்பளத்தில் கெசட்டில் பிரிவில் அல்லாத ஊழியர்கள் ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 7000 ரூபாய் பெற முடியும். அப்படிக் கணக்கிடும் போது அதிகப்படியான ஒரு ரயில்வே ஊழியர் 78 நாட்களுக்குச் சுமார் 17,951 ரூபாய் பெற முடியும்.
10 வருடம்
மத்திய அரசு 2010-11 நிதியாண்டில் இருந்து 2019-20 ஆண்டு வரையில் அனைத்துக் கெசட்டில் பிரிவில் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் 78 நாள் போனஸ் அளிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் 2020-21 நிதியாண்டுக்கு 78 நாள் சம்பளத்தைப் போனஸாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11.59 லட்சம் ரயில்வே ஊழியர்கள்
இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்தப் போனஸ் மூலம் 11.59 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். இதன் மூலம் இந்த வருடம் தீபாவளி மற்றும் தசரா பண்டிகையை மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications