இந்தியாவில் ஓலா, ஊபர் , ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக வாடகைக்கு கார் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்து நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி வாடகை வாகன சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
பொதுவாக ஊபர், ஓலா உள்ளிட்ட செயலிகளில் வாடகை கார்கள், ஆட்டோக்களுக்காக புக் செய்யும் போது அது பீக் அவர் என்றால் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக காட்டும். சாதாரணமாக 200 ரூபாய் கட்டணம் கிடைக்கும் என்றால் பீக் அவர்களில் அது 300 ரூபாய்க்கு மேல் காட்டும். பீக் அவர்களில் அதிக டிமாண்ட் இருப்பதே இப்படி அதிக கட்டணம் காட்ட காரணம். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமான ஒரு விதிமுறையை கொண்டு வந்துள்ளது. மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் பீக் அவர்களில் வாகனங்களுக்கான வாடகையை இரண்டு மடங்கு வரை உயர்த்திக் கொள்ளலாம் என அனுமதி தந்திருக்கிறது. மத்திய அரசு தனிநபர் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக பயன்படுத்த அனுமதி கொடுத்திருக்கிறது.
மாநில அரசுகள் ஆட்டோ, கார், இரு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்றும் இந்த வாகனங்களுக்கான அடிப்படை வாடகை தொகையை நிர்ணயம் செய்துவிட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓலா,ஊபர் , ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்களில் பீக் அவர்களில் இந்த அடிப்படை கட்டணத்தில் இருந்து இரண்டு மடங்கு வரை அதிக கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குள் மாநில அரசுகள் இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் செயலிகள் வழியே ஒரு வாடிக்கையாளர் ஆட்டோ, கார் அல்லது பைக் டாக்ஸி முன்பதிவு செய்கிறார். அதனை ஏற்றுக் கொண்ட ஓட்டுநர் திடீரென பயணத்தை ரத்து செய்தால் அந்த அபராத தொகை அதிகபட்சம் 100 ரூபாய்க்குள் இருக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை ஓட்டுநரும், வாடகை வாகன சேவை வழங்கும் செயலி நிறுவனங்களும் ஏற்க வேண்டும்., ஒரு வேளை முன்பதிவு செய்துவிட்டு ஓட்டுநர் அந்த நோக்கி புறப்பட்ட பின்னர் வாடிக்கையாளர் ரைடினை ரத்து செய்தால் அவருக்கு 10% அபராதம் விதிக்கப்படும். மேலும் அனைத்து வாடகை வாகனங்களிலும் Vehicle Location and Tracking Devices பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் புறப்படும் இடத்தில் இருந்து தான் வாடகை கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும், வாடிக்கையாளர் ஏற்றிக் கொள்வதற்காக ஓட்டுநர் தான் இருக்கும் இடத்தில் இருந்து வாடிக்கையாளரின் இடத்திற்கு பயணம் செய்யும் தூரத்திற்கு கட்டணம் வசூல் செய்ய கூடாது என அரசு கூறியுள்ளது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பியிடம் 10 லட்சம் ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸும் செயலிகள் தரப்பில் வழங்கப்பட வேண்டும். ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது புத்துணர்வு பயிற்சி அளிக்க வேண்டியது இந்த செயலிகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications