டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு என அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு , ஊழியர்கள் இந்த காரணத்திற்காக 30 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக விடுப்பு எடுப்பதற்கு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் , மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்வது உட்பட தனிப்பட்ட காரணங்களுக்காக 30 நாட்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் என பதிலளித்திருக்கிறார். மத்திய குடிமைப் பணிகள் விதி 1972 இன் படி மத்திய அரசு ஊழியர் ஒருவர் ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் அதனை வயதான பெற்றோரை கவனித்து கொள்வது உட்பட தனிபட்ட காரணங்களுக்காகவும் எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பினை தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 நாட்கள் அரை சம்பளம் விடுப்பு , 8 நாட்கள் சாதாரண விடுப்பு மற்றும் 2 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த விடுப்புகளை வயதான பெற்றோரை கவனிப்பது உட்பட எந்த ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு தொடர்பான விதிமுறைகள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு, மகப்பேறு கால விடுப்பு ,குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்வதற்கான விடுப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்பு மற்றும் காயங்களுக்கான விடுப்பு, துறை சார்ந்த விடுப்பு , படிப்பதற்கான விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது .
ஆண்டு தோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த விடுப்பு கணக்கு என்பது அப்டேட் செய்யப்படும் அவர்களின் கணக்கில் இதுவரை பயன்படுத்திருக்க கூடிய விடுப்புகள் என்னென்ன, எவ்வளவு பேலன்ஸ் இருக்குது என்பதை அதில் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications