EPF வட்டி 8.25% ஆக உயர்வு.. மத்திய அரசு ஒப்புதல்.. உங்கள் சேமிப்பு பணம் உயரப்போகுது.!!

மத்திய அரசு 2024-25ஆம் நிதியாண்டுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) வட்டி விகிதத்தை 8.25% ஆக அறிவித்துள்ளது. இதனை EPFO (Employees Provident Fund Organisation) பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வட்டி விகிதம் EPF கணக்குள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அதாவது, உங்கள் EPF கணக்கில் சேரும் பணத்தில் அதிக வட்டி வரப்போகிறது. EPF என்பது ஒரு சேமிப்பு திட்டமாகும். இதில், ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் 12% பங்கு அவருடைய EPF கணக்கில் செலுத்தப்படுகிறது. அதே அளவிலேயே, முதலாளியும் 12% பங்கு செலுத்த வேண்டும். ஆனால், முதலாளியின் பங்களிப்பு முழுவதும் EPF-க்குப் போகாது. அதில் ஒரு பகுதி EPS எனப்படும் ஓய்வூதிய திட்டத்திற்குச் செல்கிறது.

உதாரணமாக, ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ.50,000 என்றால், ஊழியர் பங்களிப்பு (12%) = ரூ.6,000, முதலாளி பங்களிப்பு (12%) = ரூ.6,000, இதில் EPS-க்கு (ஓய்வூதியத்திற்காக) ரூ.1,250 செல்கிறது. EPF-க்கு மீதமுள்ள ரூ.4,750 செல்கிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 (ஊழியரிடமிருந்து) மற்றும் ரூ.4,750 (முதலாளியிடமிருந்து) சேர்த்து, மொத்தம் ரூ.10,750 உங்கள் EPF கணக்கில் சேரும்.

EPF வட்டி 8.25% ஆக உயர்வு.. மத்திய அரசு ஒப்புதல்.. உங்கள் சேமிப்பு பணம் உயரப்போகுது.!!

PF வட்டி மாதத்துக்கு மாதம் கணக்கிடப்பட்டாலும், முழு வட்டி தொகை நிதியாண்டு முடிவில், அதாவது மார்ச் மாதம் பிறகு, உங்கள் EPF கணக்கில் சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, 2024-25 நிதியாண்டில், ஏப்ரல் மாதம் உங்கள் EPF இருப்பு ரூபாய் 5,10,750 ஆக இருந்தால், அந்த மாதத்திற்கான வட்டி ரூபாய் 3,511.41 ஆக இருக்கும். இதுபோல, ஒவ்வொரு மாதமும் உங்கள் EPF இருப்பு மற்றும் அதற்கான வட்டி குறைந்த மாறுதல்களுடன் கணக்கிடப்பட்டு சேர்க்கப்படுகிறது. வருட முழுவதும், மாதம் மாதம் வட்டி சேர்க்கப்பட்டு, இறுதியில் மார்ச் 2025-ல் மொத்த வட்டி ரூபாய் 47,014.69 ஆகும். இதனால் உங்கள் EPF கணக்கு அதிகரிக்கிறது மற்றும் சேமிப்பில் அதிக நன்மை கிடைக்கிறது.

EPFO வழக்கமாக நிதியாண்டு முடிவுக்கு பிறகு ஜூலை முதல் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வட்டியை வரவு வைக்கும். EPF பாஸ்புக் ஆன்லைனில் பார்க்க சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால், உங்கள் EPF நிலுவை எப்போதும் UMANG செயலி, EPFO வலைத்தளம் அல்லது SMS மூலம் சரிபார்க்கலாம். பொதுவாக, தாமதம் இருந்தாலும் நீங்கள் வட்டியை இழக்க மாட்டீர்கள். EPFO இது குறித்து பல முறை உறுதி கூறியுள்ளது. புதிய விதிகளின்படி, நீங்கள் பணத்தை எடுக்கும் அந்த நாள்வரை வட்டி கணக்கிடப்படும்.

மேலும், 8.25% என்பது கடந்த சில ஆண்டுகளில் வந்த அதிக வட்டி விகிதங்களில் ஒன்றாகும். EPF என்பது நீண்ட கால சேமிப்புக்கான நலத்திட்டம். அதனால் வட்டி கூடுதல் என்பது நம்மைச் சேர்ந்த நன்மையாகும். நீங்கள் வேலை விட்டு விடும் வரை அல்லது ஓய்வு பெறும் வரை இந்த பணத்தை வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், தேவைக்கேற்ப பங்காக எடுத்துக்கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+