உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தை அதிகரித்த மத்திய அரசு.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

சென்னை: அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்திற்கான வரம்புகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்த அகவிலைப்படி அதிகரிப்பைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்திற்கான வரம்புகளை மத்திய அரசு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

 உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தை அதிகரித்த மத்திய அரசு.. ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!


மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தியது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) மற்றும் விடுதி மானியம் ஆகியவை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, மார்ச் 12 ஆம் தேதி, நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

போன மாதம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்தது. மார்ச் 7ஆம் தேதி அன்று, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த உயர்வு சுமார் ஒரு கோடி அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொகை மூன்று மாத அரியர் தொகையுடன் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கல்வி உதவித் தொகையிலும் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது.

பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின் படி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான தொகை ரூ. 2,812 ஆகவும் மற்றும் விடுதி மானியம் ரூ. 8,437.5 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வழக்கமான தொகையை விட இருமடங்கு பெறலாம் என்றும், மேலும், மாதத்திற்கு ரூ.5,625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான, குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை மாதம் ரூ.3,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் குறைபாடுகள் உள்ள பெண் ஊழியர்களுக்கு இது கூடுதல் உதவியை வழங்குகிறது.

இந்த மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்?: இந்த திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+