சென்னை: அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்திற்கான வரம்புகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்த அகவிலைப்படி அதிகரிப்பைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்திற்கான வரம்புகளை மத்திய அரசு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தியது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை (CEA) மற்றும் விடுதி மானியம் ஆகியவை ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, மார்ச் 12 ஆம் தேதி, நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
போன மாதம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்தது. மார்ச் 7ஆம் தேதி அன்று, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த உயர்வு சுமார் ஒரு கோடி அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொகை மூன்று மாத அரியர் தொகையுடன் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கல்வி உதவித் தொகையிலும் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது.
பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின் படி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான தொகை ரூ. 2,812 ஆகவும் மற்றும் விடுதி மானியம் ரூ. 8,437.5 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வழக்கமான தொகையை விட இருமடங்கு பெறலாம் என்றும், மேலும், மாதத்திற்கு ரூ.5,625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான, குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை மாதம் ரூ.3,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் குறைபாடுகள் உள்ள பெண் ஊழியர்களுக்கு இது கூடுதல் உதவியை வழங்குகிறது.
இந்த மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும்?: இந்த திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications