டெல்லி: மத்திய அரசு கூடிய விரைவில் 8ஆவது ஊதிய குழு தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அரசு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறும் பலன்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
கிட்டதட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எப்பொழுது 8ஆவது ஊதிய குழு அமைக்கப்படும் என்பது குறித்து அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

இந்த ஊதிய குழு அமைக்கப்பட்ட உடன் இவர்கள் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான தொகை ஆகியவை பெரிய அளவில் மாற்றமடையும். வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டிலேயே அல்லது அதற்கு முன்னதாகவே அரசு 8ஆவது ஊதியக்குழுவை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என சொல்லப்படுகிறது.
8ஆவது ஊதிய குழு நியமனம் செய்யப்பட்டு அந்த ஊதியக்குழு வழங்கும் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. அவ்வாறு 8ஆவது ஊதிய குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அதிகரிக்கும்.
அரசு தரப்பில் இதுவரை அடுத்த ஊதியக்குழு அமைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் கூடிய விரைவில் அந்த தகவல் வெளிவரும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கு 2.86 மடங்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. National Council of the Joint Consultative Machinery அளித்த பரிந்துரையான fitment factor 2.86 என்பதன் அடிப்படையில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
ஃபிட்மன்ட் ஃபேக்டர் (fitment factor)என்பது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகியவற்றை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகும். ஏழாவது ஊதியக்குழுவினை பொருத்தவரை மத்திய அரசு ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57ஐ பயன்படுத்தியது.
இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம் என்பது 7000 லிருந்து 18,000 ரூபாய் என உயர்ந்தது. ஒவ்வொரு முறை புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் உயர்த்தப்படுகிறது.
அடுத்த ஊதியக்குழு 2.86 ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கினால் தற்போது இருக்கக்கூடிய அடிப்படை சம்பளமான 18 ஆயிரம் ரூபாய் என்பது 51 ஆயிரம் ரூபாயாக உயருமாம். அதேபோல ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை 9,000 ரூபாயிலிருந்து 25,740 ரூபாயாக அதிகரிக்கும். இது தவிர்த்து அகவிலைப்படி படியிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications