டெல்லி: 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு தொகை 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது சம்பள கமிஷனானது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர இருக்கிறது. இந்த 8ஆவது சம்பள கமிஷனின் மூலம் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய இருக்கின்றனர்.
7ஆவது சம்பள கமிஷன் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதன்படி மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதிய தொகையாக மாதத்திற்கு 9 ,000 ரூபாயும், அதிகபட்ச ஓய்வூதிய தொகையாக மாதத்திற்கு 1.25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆண்டுதோறும் இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைக்கு அடிப்படை ஓய்வூதிய தொகையில் 53 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 10000 ரூபாய் ஓய்வூதிய தொகை வாங்கக்கூடிய நபர்கள் ,அகவிலை படியோடு சேர்த்து 15,300 ரூபாயாக வாங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலும், பண வீக்கத்தின் அடிப்படையிலும் அகவிலைப்படியானது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது 8ஆவது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வுத்தொகை கணிசமாக உயரும் என சொல்லப்படுகிறது.. National Council of the Joint Consultative Machinery அளித்த பரிந்துரையான fitment factor 2.86 என்பதன் அடிப்படையில் சம்பளமும் ஓய்வூதியமும் உயர்த்தப்பட உள்ளது.
ஃபிட்மன்ட் ஃபேக்டர் (fitment factor)என்பது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகியவற்றை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகும். ஏழாவது ஊதியக்குழுவினை பொருத்தவரை ஃபிட்மன்ட் ஃபேக்டர் 2.57ஐ பயன்படுத்தியது.
ஒவ்வொரு முறை புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஃபிட்மன்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் உயர்த்தப்படுகிறது. 2.86 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டர் நடைமுறைக்கு வந்தால் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை 9000 ரூபாயிலிருந்து 25,740 ரூபாயாக உயரும்.
அதாவது தற்போது கிடைக்கும் ஓய்வூதியத்தை விட 186 சதவீதம் அதிகரிக்கும். அதேபோல அதிகபட்ச ஓய்வூதிய தொகை தற்போது இருக்கும் 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 3.57 லட்சம் ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது. இத்துடன் அகவிலைப் படியும் வழங்கப்படும் என்பதால் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய பலன்களை அடைய உள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications