கர்நாடகா மாநிலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போட்டி போட்டுக் கொண்டு புகழ்பெற்ற தோசை கடைகள் திறக்கப்படுகின்றன. எனவே பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்பவர்கள் இனி கர்நாடகாவின் பாரம்பரிய மசாலா தோசை ருசிக்க முடியும்.
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கெம்பகவுடா விமான நிலையத்தின் டெர்மினல் 2 அரைவல் பகுதியில் பெங்களூருவின் புகழ்பெற்ற சிடிஆர் எனப்படும் சென்ட்ரல் டிபன் ரூம் (Central Tiffin Room) உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாகா மாநிலத்தின் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த இந்த சிடிஆர் கடை மசாலா தோசைக்கு மிகவும் புகழ் பெற்றது. கர்நாடகாவுக்கே உரிய ருசி கொண்ட மசாலா தோசை உண்ண வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக சென்ட்ரல் டிபன் ரூம் கடையில் அதனை ருசி பார்க்க முடியும். தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இந்த கடையானது திறக்கப்பட்டு இருக்கிறது. இதனை விமான நிலையத்தின் சிறப்பு செயல்பாட்டு அதிகாரியான சத்யாகி ரகுநாத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பெங்களூரு விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதியில் சிடிஆர் கடை திறக்கப்பட்டு இருக்கிறது, சிறுவயதில் நான் உண்ட அதே ருசி கொண்ட மசாலா தோசையை இன்று நான் உண்டேன் என தெரிவித்திருக்கிறார். ஆனால் விமான நிலையத்திற்குள் இருப்பதால் இந்த கடையில் விற்கப்படும் தோசைகளின் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மல்லேஸ்வரத்தில் இருக்கும் சிடிஆர் கடையில் ஒரு பட்டர் மசாலா தோசையின் விலை 90 ரூபாய் என்றால் விமான நிலையத்தில் அதன் விலை 285 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பெங்களூரில் தற்போது புகழ்பெற்று வரக்கூடிய மற்றொரு உணவகமான ராமேஸ்வரம் கஃபே கூடிய விரைவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தங்களுடைய கடையை திறக்க இருக்கிறது. டெர்மினல் 1 பகுதியில் மார்ச் மாதம் இந்த உணவகம் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள் இனி கர்நாடக மாநிலத்திற்கு உரிய ருசி கொண்ட மசாலா தோசை மற்றும் பிற உணவுகளை ருசிக்க முடியும்.
கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் 2008 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே மூன்றாவது பிஸியான விமான நிலையம் என்ற பெயர் இதற்கு உண்டு . தற்போது பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 75 உள்நாட்டு விமானங்களும் 30 சர்வதேச விமானங்களும் இயக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் பெங்களூரு விமான நிலையத்தை சுமார் 40 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications