கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் பல கோடி நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்து கடுமையான நிதிநெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, ஊழியர்களின் பெயரில் மாதம் மாதம் செலுத்தப்படும் பிஎ பணம் செலுத்தக் கால நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நீட்டிப்பு மூலம் பல ஆயிரம் நிறுவனங்கள் இயங்க சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான நிதி உடனடியாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
கால நீட்டிப்பு
மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிஎப் கணக்கில் செலுத்தப்படும் பணத்தை 30 நாள் அவகாசம் பெற்றும் செலுத்தலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலான நிதி, வர்த்தகத்திற்குக் கிடைக்கும் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிதியைக் கொண்டு நிறுவனங்கள் தங்களின் வர்த்தகக் கடனை முறையாகச் செலுத்த முடியும். இதனை நினைவில் வைத்துத் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
24 சதவீத தொகை
நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் HRAவில் 24 சதவீத தொகையைத் தான் பிஎப் கணக்கில் செலுத்தும். இதில் 12 சதவீதம் ஊழியர்கள் பங்கீடாகவும், 12 சதவீதம் நிறுவன பங்கீடாகவும் இருக்கும்.
மார்ச் மாதத்திற்கான தொகையை ஏப்ரல் 15ஆம் தேதி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 30 நாள் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
12,000 கோடி ரூபாய்
ஒவ்வொரு மாதம் ஈபிஎப்ஓ அமைப்பிற்கு ஊழியர்கள் கணக்கிற்குச் சுமார் 12,000 முதல் 12,500 கோடி ரூபாய் அளவிலான நிதி வருகிறது. இந்த நிதி அடுத்த 30 நாட்களுக்கு நிறுவனங்கள் கையில் தான் இருக்கப்போகிறது. இதனால் நிறுவனங்கள் இந்த நிதியைக் கொண்டு சரிவர இயங்க உதவும் என்பது தான் இந்த அறிவிப்பின் அடிப்படை நோக்கம்.
இதையும் தாண்டி, இந்தத் தளர்வுகளின் மூலம் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்தை முழுமையாகக் கொடுக்க முடியும் என்பதும் இதில் அடங்குகிறது.
30 நாள் நீட்டிப்பு
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 30 நாள் நீட்டிப்பு அடுத்த மாதம் வரையில் நீட்டிக்கப்பட உள்ள நிலையில் நிறுவனங்களுக்குக் குறைந்த கால நிதியாகச் சுமார் 24,000 கோடி ரூபாய்க் கிடைக்கிறது. இது கண்டிப்பாக நிறுவனங்கள் தங்களது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர நிச்சயம் உதவும் என ஈபிஎப்ஓ அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications