மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் ஒரு சில மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் 16 வகை மருந்து மாத்திரைகளை மருந்து கடையில் மக்கள் வாங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
இதற்கான சட்டவரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட இருப்பதாகவும் இதன் காரணமாக பாராசிட்டமால் உள்பட 16 வகை மருந்து மாத்திரைகளை இனி மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
16 வகை மருந்துகள்
16 வகை மருந்துகள் வாங்குவதற்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த 16 வகை மருந்துகள் தவிர மற்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை
இதுகுறித்து சுகாதாரத்துறையின் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அமைச்சகம் ஆலோசனை செய்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ஆணையையும் வெளியிட்டுள்ளது.
மருந்துச்சீட்டு
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க அனுமதிக்கப்படும் 16 வகை மருந்துகளில் பாரசிட்டமால், டிஸ்இன்பெக்ட் மாத்திரைகள், இருமலுக்கு சாப்பிடும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைட் லோஜன்சஸ் மருந்துகள், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி பங்கள் க்ரீம், நாசல் டீகன்ஜசன்ஸ், அலர்ஜி மருந்துகள் ஆகிய மருந்துகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதா
இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அதன் பிறகு குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற உடன் பொதுமக்கள் மேற்கண்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆலோசனை
ஆனால் அதே நேரத்தில் இந்த மருந்துகளை வாங்கி 5 நாட்கள் பயன்படுத்திய பிறகும் நோய் குணமடையாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை சம்பந்தப்பட்டவர்கள் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும் வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications