நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மீதான கலால் வரி வசூலில், 48% அதிகரித்துள்ளது.
இது குறித்து வெளியான தரவின் படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கலால் வரி வசூலானது 67,895 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது நடப்பு ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளது.
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தலுக்கு பிறகு, ஏர் டர்பைன் எரிபொருள், பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீது கலால் வரி விதிக்கப்படுகிறது.
கலால் வரி
எரிபொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களும் ஜிஎஸ்டியின் கீழ் வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் 32,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அரசாங்கம் திரும்ப செலுத்த வேண்டிய 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பத்திர மதிப்பினை விட மூன்று மடங்கு அதிகம்.
எண்ணெய் பத்திரங்கள் தான் காரணமா?
இந்த எண்ணெய் பத்திரங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி 23 லட்சம் கோடி ரூபாபாயை மோடி அரசு ஈட்டியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
ஹர்தீப் சிங் பூரி கருத்து?
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹர்தீப் சிங் பூரி, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெளியிட்ட எண்ணெய் பத்திரங்கள் மூலம் பாஜக ஆட்சி மீது 1.5 லட்சம் கோடி ரூபாய் சுமை ஏற்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.
எரிபொருட்கள் மீதான வரி அதிகரிப்பு
கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது. அந்த சமயத்தில் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரி விகிதத்தினை 19.98% அதிகரித்து, லிட்டருக்கு 32.9 ரூபாயாக அதிகரித்தது. இதே டீசல் மீதான வரி லிட்டருக்கு 31.80 ரூபாயாக விதிகப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வரி அதிகரிப்பு
அக்டோபர் 2017ல் அரசாங்கம் கலால் வரியை 2 ரூபாயும், அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 1.50 ரூபாயும் குறைத்தது. ஆனால் இந்த கலால் வரியை மீண்டும் 2019 ஜூலையில் லிட்டருக்கு 2 ரூபாய் ஏற்றியது. இதே 2020 மார்ச் மாதத்தில் மீண்டும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதே ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயாகவும், டீசலுக்கு 13 ரூபாயும் உயர்த்தியது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!



Click it and Unblock the Notifications