இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 2026-27 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள எய்ம்ஸ் டெல்லியின் கதிரியக்க புற்றுநோயியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் சங்கர் எய்ம்ஸ் "நாட்டில் கருப்பை வாய்ப் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்கள் உயிரிழக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைக் கருதி, வரவிருக்கும் பட்ஜெட்டில் புற்றுநோய் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். கருப்பை வாய்ப் புற்றுநோய் பெரும்பாலும் தடுக்கக்கூடியது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம் என்றும் கூறினார்.

உலக அளவில், கருப்பை வாய்ப் புற்றுநோயை முற்றிலுமாக ஒழிப்பது ஒரு முக்கிய பொது சுகாதார முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனெனில், ஆரம்பத்திலேயே கண்டறிவது சிகிச்சையின் விளைவுகளை கணிசமாக மேம்படுத்துகிறது. மேலும், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால், இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
அரசு முன்முயற்சிகள் குறித்துப் பேசிய டாக்டர் அபிஷேக் சங்கர், "ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளது. இதன் உதவியுடன், சுகாதார சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, புற்றுநோய் மருத்துவச் சேவை கட்டமைப்பு வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் புற்றுநோய் சிகிச்சை கிடைப்பதை இது சாத்தியமாக்கியுள்ளது" என்று கூறினார்.
இந்தத் திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எதிர்காலத்தில் புற்றுநோய் சிகிச்சையின் தேவைகள் அதிகரிக்கக்கூடும் என்றும், இலக்கு சார்ந்த மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"கடந்த மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புற்றுநோய், அரிய நோய்கள் மற்றும் பிற தீவிர நாள்பட்ட நோய்களுக்கான 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்" என அவர் கூறினார். அதே சமயம், "அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்களை (Day Care Cancer Centres) நிறுவ அரசு வழிவகுக்கும். 2025-26 நிதியாண்டில் 200 இத்தகைய மையங்கள் அமைக்கப்படும்" என்றும் நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
"புற்றுநோய் சிகிச்சையை மலிவுடையதாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு தொடர்ந்து நிலைமையை மதிப்பிட்டு வருகிறது. கடந்த ஆண்டு, நிதியமைச்சர் அத்தியாவசிய மருந்துகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவித்திருந்தார். அரசு இதுபோன்ற முடிவுகளை, ஆதாரம் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கிறது" என்று குறிப்பிட்டார்.
தேசிய என்சிடி (NCD) போர்ட்டலின் தரவுகளின்படி, ஜூலை 20, 2025 நிலவரப்படி, இந்தியாவில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 254.2 மில்லியன் தகுதியான பெண்களில் 101.8 மில்லியன் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.உலக அளவில், கருப்பை வாய்ப் புற்றுநோய் ஒரு முக்கிய பொது சுகாதார கவலையாகவே நீடிக்கிறது. இது பெண்களிடையே ஏற்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 300,000 க்கும் அதிகமான இறப்புகளை இது ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications