வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. இனிமே எல்லாம் இப்படித்தான்.. சந்திரபாபு நாயுடுவின் கலக்கல் பிளான்..!!

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் உலகம் முழுவதும் நிறுவனங்களின் பணி கலாச்சாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தி, தயாரிப்பு துறைகளை சேர்ந்த நிறுவனங்களை தவிர்த்து மற்ற துறைகளை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றும்படி (ஒர்க் ஃப்ரம் ஹோம்) கேட்டுக் கொண்டன. குறிப்பாக ஐடி துறை பணியாளர்கள் ஒர்க் ப்ரம் ஹோம் மாடலில் பணியாற்றி வந்தனர். 2023ம் ஆண்டு மத்தியில் இருந்துதான் அவர்கள் கொஞ்சமாக அலுவலகத்துக்கு திரும்ப தொடங்கினர்.

தற்போது பெண் நிபுணர்களை மேம்படுத்தும் நோக்கில், ஆந்திர பிரதேசத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை விரிவுப்படுத்துவற்கான ஒரு சூப்பர் திட்டத்தை அ்ம்மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சர்வதேசம் தினத்தை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸில் தனது பக்கத்தில், இன்று எஸ்டிஇஎம் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம். மேலும், இந்த துறையில் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு அவர்களுக்கு முழுமையான மற்றும் சமமான அணுகலை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

வீட்டிலிருந்தே வேலை பாருங்க.. இனிமே எல்லாம் இப்படித்தான்.. சந்திரபாபு நாயுடுவின் கலக்கல் பிளான்..!!

நெகிழ்வான மற்றும் அளவிடக்கூடிய வாய்ப்பாக இருந்ததால் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை முக்கியத்துவம் பெற்றது. இந்த போக்கு சிறந்த பணி-வாழ்க்கை சமநிலையை அடைய உதவும், இது பெண் நிபுணர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆந்திர பிரதேச அரசின் ஐடி அண்ட் ஜிசிசி கொள்கை 4.0, மாநிலத்தின் ஐடி மற்றும் ஜிசிசி சுற்றச்சூழல் அமைப்பை மாற்றுவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு படியாகும். உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நவீன பணி நடைமுறைகளுடன் ஒத்துப்போகும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நகரம், டவுன் மற்றும் மண்டலத்திலும் ஐடி அலுவலக இடங்களை உருவாக்குவதை இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த முயற்சிகள், அதிக பணியாளர்கள் பங்கேற்பை வளர்க்கும் குறிப்பாக பெண் நிபுணர்கள் வீட்டிலிருந்து வேலை அல்லது கலப்பின விருப்பங்களிலிருந்து பயனடையவார்கள். குடும்ப பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் அதேவேளையில், தங்கள் கேரியரை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் பெண்களுக்கு அதிக தேர்வுகளை வழங்குவதில் இதுபோன்ற முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று பதிவு செய்து இருந்தார். உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதியன்று அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சர்வதேசம் தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (எஸ்டிஇஎம்) துறைகளில் பெண்களின் முழுமையான மற்றும் சமமான அணுகல் மற்றும் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக ஐ.நா. சபையால் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+