இந்திய விண்வெளித் துறையை சேர்ந்த நிறுவனங்கள் புதன்கிழமை பெருமைக்கு உரிய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முக்கியமான கட்டத்தை அடைய உள்ளது, முன்னதாக ரஷ்யா இதில் பெரும் தோல்வி அடைந்த நிலையில் இந்தியாவின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது உலக நாடுகள்.
சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி வெற்றி அடைந்தால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தளத்திற்கு புதிய மகுடம் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு முன்னோடியாக இந்தியா இருக்கும். மேலும் இது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த நிலையில் ப்ளூம்பெர்க் முக்கியமான ஒரு ஆய்வை செய்து வெளியிட்டு உள்ளது, சந்திரயான் -3 விண்கலம் மற்றும் அதன் ராக்கெட் தயாரிப்பில் தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் முதல் உலோகங்கள், கருவிகள் வரையிலான பல்வேறு உபகரணங்களை வழங்கிய 13 இந்திய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் மட்டும் சந்தை மதிப்பில் 2.5 பில்லியன் டாலருக்கு மேல் சேர்த்துள்ளது.
சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்துக்கொள்ள மிகவும் முக்கியமான சம்பவம் இது. அதாவது சந்திரயான் -3 திட்டத்தில் வெளியில் இருந்து பணியாற்றிய ISRO ஊழியர்கள் கடுமையான உழைப்பை போட்டு உள்ளனர். இவர்களுக்கு வெளியில் இருந்து பல நிறுவனங்கள் உதவியுள்ளது.
இப்படி சந்திரயான் -3 திட்டத்திற்கு உதவிய 13 நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. சந்திரயான் -3 திட்டத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO-வின் சந்திரயான் -3 ராக்கெட் புதன்கிழமை மாலை நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்க முயற்சிக்க உள்ளது. ரஷ்யாவின் இதேபோன்ற முயற்சி தோல்வியில் முடிந்த பின்னர், இதுவரையில் யாரும் செல்லாத ஒரு பகுதிக்கு இந்தியா பயணிக்க உள்ளது.
இந்த நிலையில் சந்திரயான் -3 விண்கலம் உருவாக்க முக்கிய சப்ளையர்களின் பட்டியலில் சில.. எரிவாயு நிறுவனமான லிண்டே பங்குகள் இந்த வாரம் 23% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த பணிக்கான முக்கியமான மாடியூல் மற்றும் சிஸ்டம் வழங்கிய சென்டம் எலெக்ட்ரானிக்ஸ், கிட்டத்தட்ட 11% உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வழங்குநரான Avantel 12% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மூன் மிஷன் போன்ற முக்கியமான திட்டங்களில் பங்கேற்பது இந்த பிரிவில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
மேலும் இத்திட்டத்தின் வெற்றியின் மூலம் இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளுக்கும் உதவி செய்யும், முக்கிய சப்ளையராக உயர முடியும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications