வேலையை மாத்த போறீங்களா? – வருமான வரி தாக்கல்ல இந்த பிரச்சினை வரும் பார்த்துக்கோங்க..!

சென்னை: இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் வருமான வரி தாக்கலின் போது பெரிய பிரச்சினையை சந்திக்கின்றனர். ஆனால் இது பெரும்பாலும் பொதுவெளியில் பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் பீரியடை முடிக்காமல் வேறு நிறுவனத்திற்கு பணி மாறும்போது தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் திடீரென அந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறார்.

வேலையை மாத்த போறீங்களா? – வருமான வரி தாக்கல்ல இந்த பிரச்சினை வரும் பார்த்துக்கோங்க..!

அப்போது அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் நோட்டீஸ் பீரியட் முழுவதும் அவரால் அந்த பணியில் இருக்க முடியவில்லை. இவ்வாறு நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாமல் விட்டதற்காக அந்த நிறுவனம் அந்த ஊழியரின் சம்பளத்தில் கணிசமான தொகையை அபராதமாக பெறுகிறது.

அதேவேளையில் அவர் செல்லக்கூடிய புதிய நிறுவனம் உடனடியாக வந்து வேலைக்கு சேர்ந்ததற்காக அந்த ஊழியருக்கு பழைய நிறுவனம் விதித்த அபராத தொகையை போனஸாக வழங்குகிறது. ஆனால் வருமான வரி துறையோ பழைய நிறுவனம் வழங்காமல் விட்ட தொகையையும் வருமானமாகவே கருத்தில் கொள்கிறது.

உதாரணமாக மணி என்ற ஊழியர் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். திடீரென அந்த நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்து வேறு நிறுவனத்திற்கு சென்று விடுகிறார். பழைய நிறுவனம் இரண்டு மாதங்கள் நோட்டீஸ் பீரியட்டில் பணி செய்யாமல் திடீரென வேலையை விட்டதற்காக மணியிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை அபராதமாக பெறுகிறது.

அதே வேளையில் மணி புதிதாக வேலைக்கு சென்று நிறுவனம் அந்த 2 லட்சம் ரூபாயை அவருக்கு இழப்பீடாக வழங்குகிறது. ஆனால் வருமான வரி கணக்கு தாக்கலின் போது மணியின் வருமானம் 12 மாதங்களுக்கும் 12 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 2 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையை சேர்த்து 14 லட்சம் ரூபாய் என கணக்கில் கொள்ளும். அவருக்கு கிடைத்த சம்பளம் 12 லட்சம் ரூபாய் தான், ஆனால் 14 லட்சம் ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டும்.

மணிக்கு அபராதம் விதித்த பழைய நிறுவனமும் இந்த 2 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். அதாவது ஒரு தொகைக்கு இரண்டு பேர் வரி செலுத்துகின்றனர். நம் வருமான வரி சட்டம் சம்பள வருமானத்தை due or receipt என்ற வரையறையில் கணக்கீடு செய்கிறது. அதாவது ஊழியருக்கு சம்பளம் செலுத்தப்பட்டாலும் செலுத்த படாவிட்டாலும் அதனை செலுத்தப்பட்டதாகவே கணக்கில் கொள்கிறது. இதுதான் பணி மாறுதல் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாததற்காக நிறுவனம் விதிக்க கூடிய அபராத தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் எந்த ஒரு பிரிவும் வருமான வரி சட்டத்தில் இல்லை. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் வரக்கூடிய பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு கொண்டு வர வேண்டும் என ஊதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக படிவம் 16இல் நிறுவனங்கள் ஊழியரிடம் பிடித்தம் செய்த தொகையை தனியாக குறிப்பிட்டு நிகர ஊதியத்தில் சேர்க்காதபடி அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+