சென்னை: இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் வருமான வரி தாக்கலின் போது பெரிய பிரச்சினையை சந்திக்கின்றனர். ஆனால் இது பெரும்பாலும் பொதுவெளியில் பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் பீரியடை முடிக்காமல் வேறு நிறுவனத்திற்கு பணி மாறும்போது தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் திடீரென அந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறார்.

அப்போது அந்த நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் நோட்டீஸ் பீரியட் முழுவதும் அவரால் அந்த பணியில் இருக்க முடியவில்லை. இவ்வாறு நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாமல் விட்டதற்காக அந்த நிறுவனம் அந்த ஊழியரின் சம்பளத்தில் கணிசமான தொகையை அபராதமாக பெறுகிறது.
அதேவேளையில் அவர் செல்லக்கூடிய புதிய நிறுவனம் உடனடியாக வந்து வேலைக்கு சேர்ந்ததற்காக அந்த ஊழியருக்கு பழைய நிறுவனம் விதித்த அபராத தொகையை போனஸாக வழங்குகிறது. ஆனால் வருமான வரி துறையோ பழைய நிறுவனம் வழங்காமல் விட்ட தொகையையும் வருமானமாகவே கருத்தில் கொள்கிறது.
உதாரணமாக மணி என்ற ஊழியர் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். திடீரென அந்த நிறுவனத்தில் வேலையை ராஜினாமா செய்து வேறு நிறுவனத்திற்கு சென்று விடுகிறார். பழைய நிறுவனம் இரண்டு மாதங்கள் நோட்டீஸ் பீரியட்டில் பணி செய்யாமல் திடீரென வேலையை விட்டதற்காக மணியிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை அபராதமாக பெறுகிறது.
அதே வேளையில் மணி புதிதாக வேலைக்கு சென்று நிறுவனம் அந்த 2 லட்சம் ரூபாயை அவருக்கு இழப்பீடாக வழங்குகிறது. ஆனால் வருமான வரி கணக்கு தாக்கலின் போது மணியின் வருமானம் 12 மாதங்களுக்கும் 12 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 2 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையை சேர்த்து 14 லட்சம் ரூபாய் என கணக்கில் கொள்ளும். அவருக்கு கிடைத்த சம்பளம் 12 லட்சம் ரூபாய் தான், ஆனால் 14 லட்சம் ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டும்.
மணிக்கு அபராதம் விதித்த பழைய நிறுவனமும் இந்த 2 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். அதாவது ஒரு தொகைக்கு இரண்டு பேர் வரி செலுத்துகின்றனர். நம் வருமான வரி சட்டம் சம்பள வருமானத்தை due or receipt என்ற வரையறையில் கணக்கீடு செய்கிறது. அதாவது ஊழியருக்கு சம்பளம் செலுத்தப்பட்டாலும் செலுத்த படாவிட்டாலும் அதனை செலுத்தப்பட்டதாகவே கணக்கில் கொள்கிறது. இதுதான் பணி மாறுதல் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாததற்காக நிறுவனம் விதிக்க கூடிய அபராத தொகைக்கு தீர்வு வழங்கும் வகையில் எந்த ஒரு பிரிவும் வருமான வரி சட்டத்தில் இல்லை. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் வரக்கூடிய பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு கொண்டு வர வேண்டும் என ஊதியதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக படிவம் 16இல் நிறுவனங்கள் ஊழியரிடம் பிடித்தம் செய்த தொகையை தனியாக குறிப்பிட்டு நிகர ஊதியத்தில் சேர்க்காதபடி அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications