சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி இன்று திறந்து வைக்கிறார். சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடம் தமிழ்நாட்டை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களை மேம்பட்ட முறையில் இணைப்பது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கான பயணிகள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்து மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவிற்கு ஏற்றுமதியும், பயண இணைப்பும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் சென்னை உள்கட்டமைப்புக்கு முக்கியமானதாக இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (NITB) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்.

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் சுமார் 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய Integrated Terminal அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது, சென்னை விமான நிலையத்தில் உள்ள நவீன வசதி அனைவருக்கும் விமானப் பயண அனுபவத்தை மேம்படுத்தும். குறிப்பாக வெளிநாட்டு பயணிகளுக்கான சேவை தரம் பெரிய அளவில் மேம்படும்.

இந்த புதிய டெர்மினலில் சுமார் 108 இமிகிரேஷன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இது பணிகளின் வருகை மற்றும் புறப்படும் பகுதிகளில் சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் இமிகிரேஷன் கிளியரென்ஸ் வேகமாக நடப்பது மட்டும் அல்லாமல் பயணிகளின் நேரத்தை பெரிய அளவில் மிச்சப்படுத்த முடியும். இந்த குடிவரவு கவுண்டர்கள், போக்குவரத்து செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் பயணிகளுக்கான பயண அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும்.
விமான பணிகள் புறப்படுவதை விரைவுபடுத்துவதற்காக 100 அதிநவீன செக்-இன் கவுண்டர்களுடன் NITB இன் முதல் கட்ட கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கவுண்டர்கள் சிறப்பான வகையில் டிசைன் செய்யப்பட்டு பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் செல்ஃப் பேக்கேஜ் டிராப் கியோஸ்க்களும் இருக்கும்.
புதிய முனையத்தின் மேற்கூரைகள் தென்னிந்தியாவின் கோலம் வடிவங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மயக்கும் மையக்கருவி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த டிசைன் மற்றும் வடிவங்கள் அனைத்தும் மார்டன் உலகை கலாச்சாரத்துடன் இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஸ்கைலைட் என்பது புதிய டெர்மினலின் தனித்துவமான அம்சமாகும். இது கட்டிடத்தின் உள்ளே வெளிச்சத்தை இயற்கையாகவே கொண்டு வருவதன் மூலம் மின்சார செலவுகள் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் இந்த ஸ்கைலைட் ஒரு இடத்தை உயிர்ப்புடனும் காற்றோட்டமாகவும் உணர வைக்கிறது.
புதிய டெர்மினலில் 11 ஆட்டோமேட்டிக் ட்ரே ரிட்ரீவல் சிஸ்டம்ஸ் (ATRS) அமைக்கப்பட்டதன் மூலம் செக்யூரிட்டி ஸ்கிரீனிங் விரைவாக இருக்கும். இந்த ATRS விமான பயணிகளில் கேரி-ஆன் பேக்கேஜை ஸ்கிரீனிங் செய்யும், அதிகளவிலான ATRS கவுன்டர் இருக்கும் காரணத்தால் பயணிகள் காத்திருக்க தேவையில்லை.

சென்னையில் இன்று திறக்கப்படும் புதிய டெர்மினல் GRIHA தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது, அதாவது ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீடு. கட்டிடங்கள் மற்றும் வாழ்விடங்களின் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடுவதற்காக GRIHA standards உருவாக்கப்பட்டது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications