சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை கடந்த 2 மாதங்களாக தேக்கம் அடைந்துள்ளது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்யப்பட்ட வேளையில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கும் வேளையில் தற்போது சென்னை விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
2026-27 நிதியாண்டில் தற்போது வரை, வான்வழி வாயிலாக சரக்கு ஏற்றுமதியில் மதிப்பின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் இந்தியாவின் முன்னணி விமான நிலையமாக உருவெடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், டெல்லி விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது தான்.

DGCI&S எனப்படும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வர்த்தகப் புலனாய்வு மற்றும் புள்ளிவிவரப் பொது இயக்குநரக அமைப்பு வெளியிட்டுள்ள தரவின்படி, சென்னை விமான நிலையத்தின் விமான சரக்கு ஏற்றுமதி மதிப்பு 13.15 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 1,25,503.6 கோடி ரூபாயாகும். டெல்லி விமான நிலையத்தில் இருந்து 11.92 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த 13.15 பில்லியன் டாலர் என்ற இமாலய அளவிலான சரக்கு ஏற்றுமதி மதிப்பை சென்னை விமான நிலையம் மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய குறைந்த அளவிலான சரக்கு உள்கட்டமைப்புடன் எட்டப்பட்டு உள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது 3 aircraft stands மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய வேகமாக சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தும் நவீன cargo infrastructure இல்லாத நிலையிலும் சென்னை விமான நிலையம் சரக்கு ஏற்றுமதி மதிப்பில் உச்சத்தில் உள்ளது.
இத்தகைய நிலையில் சென்னை விமான நிலையத்தில் நவீன cargo terminal, அதிக aircraft parking stand வசதிகள் மற்றும் விரிவான சரக்கு கையாளும் உள்கட்டமைப்பு இருந்தால், சரக்கு ஏற்றுமதி அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விஜய் தலைமையிலான அரசு தற்போது கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் மிகப்பெரிய அளவிலான சரக்குக் போக்குவரத்து (Cargo) மற்றும் தளவாடக் (Logistics) கட்டமைப்புகள் திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பரந்தூர் விமான நிலையத்திற்கு அருகில் பிரத்யேகமான ஏர் ஃபிரைட் வில்லேஜ் மற்றும் ஒருங்கிணைந்த லாஜிஸ்ட்க்ஸ் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை, டெல்லி, பெங்களூர் வரிசையில்.. மும்பையில் இருந்து 6.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், ஹைதராபாத்தில் இருந்து 3.17 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், கொல்கத்தாவில் இருந்து 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து கொச்சியில் இருந்து 356.63 மில்லியன் டாலர், கேலிக்கட் 46.35 மில்லியன் டாலர், இந்தூர் 31.67 மில்லியன் டாலர், அமிர்தசரஸ் 30.58 மில்லியன் டாலர் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

