சென்னையில் உருவான 'இந்த' ஐடி சாம்ராஜ்ஜியம் பற்றி தெரியுமா உங்களுக்கு..?!

சென்னை: புதிய தேடல், விடா முயற்சி ஆகியவை இருந்தால் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதற்கு உதாரணமான நபர் தான் இவர். கைநிறைய பணம் வந்துவிட்டால் அதனை ஏழை மக்களுக்கு வழங்கி உதவ வேண்டும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறார் இவர்.

அருண் ஜெயின், மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்டவர். டெல்லி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

சென்னையில் உருவான 'இந்த' ஐடி சாம்ராஜ்ஜியம் பற்றி தெரியுமா உங்களுக்கு..?!

இந்தியாவில் இந்தியர்களுக்கான மென்பொருளை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த இவர் தன்னுடைய மூன்று நண்பர்களோடு இணைந்து 20,000 ரூபாய் முதலீட்டில் 1983 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (international information system) என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கினார்.

தொழில்களுக்கு தேவையான மென்பொருள் சம்பந்தப்பட்ட தீர்வுகளை வழங்குவது தான் இவரது நிறுவனத்தின் நோக்கம். பின்னர் 1986 ஆம் ஆண்டு இவரது நிறுவனம் நியூக்ளியஸ் சாஃப்ட்வேர் ஒர்க் ஷாப் பிரைவேட் லிமிடெட் (Nucleus Software Workshop Pvt Ltd) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து நிறுவனத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் புதிய பாதையில் சிந்திக்க தொடங்கினார். வங்கி மற்றும் நிதி சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் மென்பொருள் சம்பந்தப்பட்ட தீர்வுகளை வழங்க வேண்டும் என முடிவு செய்தார்.

இதற்காக 10,000 ரூபாய் முதலீட்டில் 1993ஆம் ஆண்டு சென்னையில் போலாரிஸ் சாப்ட்வேர் லேப் (Polaris Software Lab) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 120 பேருடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

வங்கிகளுக்கு தேவையான பல்வேறு மென்பொருள் தீர்வுகளை இது வழங்கியது. அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் போலாரிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் சேவை பெற தொடங்கின. இதனை அடுத்து சிட்டி பேங்க் நிறுவனம் போலாரிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறியது. இதுதான் இந்த நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்தியது.

1999 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது. அடுத்த ஏழு ஆண்டுகளிலேயே இந்த நிறுவனம் நிறுவனத்தின் மதிப்பு 105 சதவீதம் என அதிகரித்தது. பின்னர் சிட்டி பேங்க் இந்தியாவின் மென்பொருள் தொழிலான ஆர்பிடெக் நிறுவனத்தை வாங்கியது. கிட்டத்தட்ட 2700 கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்த பரிவர்த்தனை நிகழ்ந்தது. 2014 ஆம் ஆண்டில் இவர் நிறுவனத்தின் பெயரை Intellect Designs Arena என மாற்றினார்.

தற்போது இந்த நிறுவனம் 240 வாடிக்கையாளர்களை கொண்டு 91 நாடுகளில் சேவையாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் சுமார் 2,500 கோடி ரூபாய் ஆகும், லாபம் 548 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. உலகின் முன்னணி வங்கிகள் இந்த நிறுவனத்திடம் இருந்துதான் ஐடி சேவைகளை பெறுகின்றன.

நிறுவனத்தின் மதிப்பு 13 ,619 கோடி என உயர்ந்திருக்கிறது. தன்னுடைய வருமானத்தில் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டு வருகிறார். கடந்த 26 ஆண்டுகளாக இவர் 114 மாவட்டங்களை சேர்ந்த 1500 பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கட்டணங்களை செலுத்தி வருகிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+