சென்னை: சென்னையை சேர்ந்த வா டெக் வாபாக் நிறுவனம் சவுதி அரேபியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 3250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இது தொடர்பாக வா டெக் வாபாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி அரேபியாவை சேர்ந்த அல் அகிர் என்விரான்மென்டல் சர்வீசஸ் நிறுவனத்துடன் தங்கள் நிறுவனம் 3251 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறியுள்ளது.
இதன்படி சுயமாக செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பது மற்றும் மேலாண்மை செய்வது உள்ளிட்ட பணிகளை தங்கள் நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதற்காக சவுதியை சேர்ந்த நிறுவனங்களோடு இணைந்து செயல்பட இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. இதன்படி வா டெக் வாபாக் நிறுவனம் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைப்பது மற்றும் கட்டமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

கட்டுமான பணிக்கு தேவையான குழாய்களை நிறுவும் பணிகளை சவுதியை சேர்ந்த அல் கோவாரி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் தங்களுடைய நிறுவனம் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி இருப்பதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். வா டெக் நிறுவனம் சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்வேறு ப்ராஜெக்டுகளை கையாண்டு வருகிறது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் சவுதி அரேபியாவில் ஏற்கனவே சுமார் 30க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி செயல்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்த நிறுவனம் சவுதி நீர் ஆணையத்திடம் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது.
திடீரென அது ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த திட்டத்திற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு இருப்பதாகவும் தங்கள் நிறுவனம் மீண்டும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வா டெக் வாபாக் வாபா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி அன்று 1385 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 8,495 கோடி ரூபாய் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 2900 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் 250 கோடி ரூபாய் லாபம். இந்த நிறுவனத்தின் 59% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது, புரோமோட்டர்கள் 19% பங்கையும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 18 % பங்குகளையும் வைத்திருக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications