சென்னை: சென்னையை சேர்ந்த வா டெக் வாபாக் நிறுவனம் சவுதி அரேபியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 3250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இது தொடர்பாக வா டெக் வாபாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி அரேபியாவை சேர்ந்த அல் அகிர் என்விரான்மென்டல் சர்வீசஸ் நிறுவனத்துடன் தங்கள் நிறுவனம் 3251 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறியுள்ளது.
இதன்படி சுயமாக செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பது மற்றும் மேலாண்மை செய்வது உள்ளிட்ட பணிகளை தங்கள் நிறுவனம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதற்காக சவுதியை சேர்ந்த நிறுவனங்களோடு இணைந்து செயல்பட இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. இதன்படி வா டெக் வாபாக் நிறுவனம் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைப்பது மற்றும் கட்டமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

கட்டுமான பணிக்கு தேவையான குழாய்களை நிறுவும் பணிகளை சவுதியை சேர்ந்த அல் கோவாரி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியாவில் தங்களுடைய நிறுவனம் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி இருப்பதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். வா டெக் நிறுவனம் சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்வேறு ப்ராஜெக்டுகளை கையாண்டு வருகிறது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் சவுதி அரேபியாவில் ஏற்கனவே சுமார் 30க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி செயல்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்த நிறுவனம் சவுதி நீர் ஆணையத்திடம் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது.
திடீரென அது ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த திட்டத்திற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு இருப்பதாகவும் தங்கள் நிறுவனம் மீண்டும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வா டெக் வாபாக் வாபா நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி அன்று 1385 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 8,495 கோடி ரூபாய் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 2900 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் 250 கோடி ரூபாய் லாபம். இந்த நிறுவனத்தின் 59% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது, புரோமோட்டர்கள் 19% பங்கையும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 18 % பங்குகளையும் வைத்திருக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications