சென்னை: இந்தியாவில் வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற நகரங்களில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கு கூட 1 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே வீடு வாங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. மேஜிக் பிரிக்ஸ் நிறுவனம் price-to-income ratio மற்றும் EMI-to-income ratio என்ற இரண்டு அளவீடுகளின் அடிப்படையில் இந்தியாவில் எந்த நகரம் வீடு வாங்குவதற்கு உகந்த நகரமாக இருக்கிறது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது . இதன்படி சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் தான் 2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை வீடுகளை வாங்குவதற்கு உகந்த நகரமாக இருக்கிறது என தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் தங்கி இருந்து வேலை பார்ப்பவர்கள் அவர்களின் ஊதியத்திற்கு ஏற்ற வகையிலான வீடுகளை வாங்க முடியும். இதுவே மற்ற நகரங்களில் தங்கிப் பணி புரிபவர்களுக்கு அவர்களின் ஊதியத்தை விட பல மடங்கு அதிக மதிப்பு கொண்ட வீடுகளை தான் வாங்க முடிகிறது.
இந்த அறிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் முழுவதும் சராசரியாக வீடுகளின் விலை 46 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் நகரத்தில் 78.6%, நொய்டாவில் 69 % அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையின்படி இந்தியாவின் முக்கியமான பத்து நகரங்களில் வீட்டு வருமானம் 2020 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஓராண்டுக்கு 5.4% ம் என உயர்ந்துள்ளது அதுவே சொத்துக்களின் விலை மதிப்பு ஓராண்டுக்கு 9.3% சதவீதம் என அதிகரித்துள்ளது.
குறிப்பாக price-to-income ratio ,அதாவது வீட்டின் வீடுகளின் விலை மதிப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது இந்த விகிதம் 2020 ஆம் ஆண்டில் 6.6% ஆக இருந்து தற்போது 7.5 % சதவீதம் என அதிகரித்துள்ளது. அதாவது வீடுகளின் மதிப்பு உயர்ந்ததற்கு ஏற்ப மக்களின் வருமானம் உயரவில்லை என்பதை தான் இது குறிப்பிடுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவிலேயே வீடு வாங்க முடியாத நகரங்களாக டெல்லி மற்றும் மும்பை ஆகியவை இருக்கின்றன. மும்பையில் price-to-income ratio 14.3 எனவும் டெல்லியில் 10.1 எனவும் இருக்கிறது. இந்த ஆய்வறிக்கை ஒரு ஒரு வீட்டின் வருமானம் மற்றும் அதன் சொந்த வீடு வாங்குவதற்காக அவர்கள் செலுத்த வேண்டிய ஈஎம்ஐ தொகை ஆகிய இரண்டின் அடிப்படையில் EMI-to-income ratio அடிப்படையிலும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு 46 % ஆக இருந்த EMI-to-income ratio நடப்பாண்டில் 61% என அதிகரித்துள்ளது , குறிப்பாக டெல்லியில் இது 82 % என அதிகரித்துள்ளது. அதே வேளையில் சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களில் இது 50% கீழ் தான் இருக்கிறது. அதாவது ஒரு குடும்பம் அவர்களின் மாத வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் கீழ் உள்ள தொகையை ஈஎம்ஐ-ஆக செலுத்தினால் போதும் என்ற சூழல் இந்த மூன்று நகரங்களிலும் நிலவுகிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

LPG பிரச்சனை: சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு.. அடுத்தடுத்து உருவாகும் பிரச்சனை.. புலம்பும் மக்கள்..!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications