சென்னை: சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பமான நகரமாக சென்னை மாறி வருகிறது என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2025 -2026 ஆம் ஆண்டுகளுக்குள் சென்னையில் 12 - 13 மில்லியன் சதுர அடி அளவிலான பிரீமியம் அலுவலக இடங்கள் உருவாகும் என 'Tamil Nadu: The Next Frontier for Global Corporations' என்ற பெயரில் சிபிஆர்இ வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சென்னையில் மாநில அரசின் வழிகாட்டி அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு மற்றும் கிரியட்டர்ஸ் ஒர்க்ஸ் அமைப்பு இணைந்து 'GCC Next Summit 24' என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை நடத்தினர்.இந்தக் கூட்டத்தில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பமான நகரமாக சென்னை மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் என அழைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மையங்கள் சென்னையில் அதிகரித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மையங்களில் பணி செய்யும் சர்வதேச தரத்திலான திறன் பெற்ற பணியாளர்களில் 11 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்போது சென்னையில் 250 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன என்றும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இது 450 முதல் 460 என அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தற்போது ஜிசிசி மையங்களுக்கான அலுவலக இடங்களை லீசுக்கு வழங்குவதில் பெங்களூரு நகரம் முதலிடத்திலும் ஹைதராபாத் நகரம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக சென்னை மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
சென்னையில் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளுக்காக அலுவலக இடங்கள் உருவாக்கப்படுவது 2022 ஆம் ஆண்டில் 1.4 மில்லியன் சதுர அடியாக இருந்து நடப்பாண்டில் 2.3 மில்லியன் சதுர அடி என அதிகரித்துள்ளதாம். மேலும் சென்னையில் இது போன்ற ஜிசிசி மையங்களுக்கு தேவையான திறன்மிகு பணியாளர்களின் எண்ணிக்கை 1.4 மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கு கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து அரசு எடுத்து வரும் பல்வேறு முன் முயற்சிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் காரணம் என சொல்லப்படுகிறது. சென்னையில் ஜிசிசி மையங்களை அமைத்ததில் 67% அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் என இந்த அறிக்கை கூறுகிறது. சென்னையில் குறிப்பாக ஓஎம்ஆர் சாலை ,மவுண்ட் பூந்தமல்லி ஹை ரோட் மற்றும் பிடி சாலை ஆகிய இடங்களில் தான் ஜிசிசி மையங்கள் அதிக எண்ணிக்கையிலான அலுவலகங்களை லீசுக்கு எடுத்துள்ளனவாம்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் இந்த அறிக்கை ஜிசிசி மையங்கள் உட்பட தமிழ்நாடு தொழில் ரீதியாகவும், சேவை ரீதியாகவும் எவ்வாறு விரிவாக்கமடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களும் உற்பத்தி மையங்களாக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!



Click it and Unblock the Notifications