சென்னை - பெங்களூரு இடையே அமைக்கப்பட்டு வரும் பசுமைச் சாலை மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் காரணங்களால் தாமதமாகியுள்ளது. சுமார் ரூ.17,000 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த திட்டம், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த நிலையில், இத்திட்டம் ஜூன் 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
262 கிமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச் சாலையில், வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணிக்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 71 கிமீ பகுதி டிசம்பர் 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 106 கிமீ பகுதியில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 80 கிமீ பணிகள் முடிவடைந்துள்ள போதும், மீதமுள்ள பகுதிகளில் மின் கோபுரங்களை இடமாற்றம் செய்வதில் தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன. இத்திட்டம் தாமதமாவதற்கு முக்கிய காரணமே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான 102 உயர் மின்னழுத்த மின் கோபுரங்களை இடமாற்றம் செய்வதுதான்.
இந்த கோபுரங்கள், காஞ்சிபுரம் - ராணிப்பேட்டை இடையே 400 kV DC மின் இணைப்பின் ஒரு பகுதியாகும். இதில் 80 கோபுரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், மீதமுள்ள 22 கோபுரங்கள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களால் தாமதமாகியுள்ளன.
இதுதொடர்பாக திட்ட அதிகாரிகள் கூறுகையில், உயர் மின்னழுத்த கோபுரங்களை இடமாற்றம் செய்வது என்பது நிலம் கையகப்படுத்துவதை போன்றது அல்ல. இதற்கு புதிய நிலத்தை அடையாளம் காண்பது, மின்பாதைகளை மாற்றுப் பாதையில் அமைப்பது போன்ற நிறைய சவால்கள் உள்ளன. மேலும், சில நில உரிமையாளர்கள் கோபுரங்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது திட்டத்தில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விரைவுச் சாலை செல்லும் ஆந்திர மாநிலத்தில் 85 கிமீ நீளமுள்ள மலைப்பகுதியில் 68 கிமீ பணிகள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டில், இந்த சாலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குடிப்பல்லா-வாலாஜாபேட்டை பிரிவில் 95% பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், மின் கோபுர இடமாற்றம் அதிகமுள்ள ஆற்காடு-காஞ்சிபுரம் பிரிவில் 50% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
அதேபோல் காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதூர் பிரிவில் 70% பணிகள் முடிந்துள்ளன. இந்த விரைவுச் சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, தற்போதுள்ள சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications