நாடு முழுவதும் நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வந்துள்ளது. இதனால் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து தீபாவளியை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் எல்லாம் திங்கள்கிழமை அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையும் தீபாவளி பண்டிகைக்காக அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 4 நாட்கள் பண்டிகை கொண்டாடி உற்றார் உறவினர்களோடு மகிழ்வுடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் வசித்து வந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அன்று இரவு வரை எங்கு பார்த்தாலும் சென்னை , பெங்களூரு சாலைகள் எங்கும் வாகனங்களாகவே காட்சி தந்தன.
மக்கள் அரசு சிறப்பு பேருந்துகள், தனியார் பேருந்துகள் தங்களின் கார்கள், பைக்குகள் ஆகியவற்றின் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்பட்ட சென்னை மற்றும் பெங்களூர் சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. கிட்டதட்ட ஊரே காலியானது போல காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று இருக்கின்றனர். சொந்த வாகனங்கள் தவிர அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவற்றிலும் இலட்சக்கணக்கான மக்கள் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு பயணம் செய்திருக்கின்றனர்.
இதனால் சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து குமார் 27 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது . மீதமுள்ள சிலர் இன்றைய தினம் பயணம் மேற்கொள்வார்கள் . இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன .

இதே சூழல் தான் பெங்களூருவிலும் காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் வரை போக்குவரத்து நெரிசல் இரண்டு கிலோ மீட்டரை கடக்க 5 மணி நேரம் டிராபிக் ஜாம் என பலரும் பதிவிட்டு வந்த பெங்களூர் சாலைகள் அனைத்தும் தற்போது காலியாக காட்சியளிக்கின்றன. பெங்களூருவில் தற்போது இருக்கக்கூடிய மக்கள் இது பெங்களூர் தானாக என தங்களை தொட்டு பார்த்துக்கொள்ளும் அளவிற்கு எப்போதும் பிசியாகவும் பரபரப்பாகவும் காணப்படும் சாலைகள் எல்லாம் தற்போது அமைதியாக இருக்கின்றன.
ஒன்று இரண்டு வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்வதை காண முடிகிறது . எக்ஸ் பக்கத்தில் பலரும் இதனை பதிவு செய்து வருகின்றனர். ஒரு நபர் கிட்டத்தட்ட பாதி பெங்களூர் ஆகிவிட்டது இந்திரா நகருக்கு 15 நிமிடங்களில் என்னால் செல்ல முடிகிறது எனக் கூறியிருக்கிறார் .மற்றொரு நபர் தற்போதைக்கு பெங்களூருவில் பெங்களூரு மக்கள் மட்டுமே தான் வசிக்கிறார்கள் போல என தெரிவித்திருக்கிறார் . ஒரு சிலர் இப்படி ஒரு அமைதியான பெங்களூருவை காண்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஆனால் இது சில நாட்களுக்கு தான் என கூறியுள்ளனர்.
More From GoodReturns

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications