வேலை செஞ்சா இப்படி ஒரு முதலாளி கிட்ட தான் செய்யணும்!! ஊழியர்களுக்கு கார் பரிசளித்த சென்னை நிறுவனம்!

சென்னை: இந்தியாவில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே தங்களுக்கு கிடைக்கும் லாபத்தை அதற்காக உழைத்த ஊழியர்களுக்கு பங்காக தரும். சில நிறுவனங்கள் தங்கள் நிறுவன பங்குகளில் ஒரு கணிசமான பகுதியை ஊழியர்களுக்கு வழங்கும், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்கும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது என்பன போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரும்.

சென்னை நிறுவனம்: ஆனால் சில நிறுவனங்கள் ஊழியர்கள் எதிர்பாராத வகையில் பெரிய அளவிலான பரிசுகளை வழங்கி அவர்களை திக்கு முக்காட செய்யும். அப்படித்தான் சென்னையை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு எஸ்யூவி காரை பரிசாக தந்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது. Agilisium என்பது சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய ஒரு கன்சல்டிங் நிறுவனம் ஆகும்.

வேலை செஞ்சா இப்படி ஒரு முதலாளி கிட்ட தான் செய்யணும்!! ஊழியர்களுக்கு கார் பரிசளித்த சென்னை நிறுவனம்!

10ஆவது ஆண்டு கொண்டாட்டம்: சென்னை பெருங்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்நிறுவனம் லைஃப் சயின்ஸ் பிரிவில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கின்றன. இந்த 10 ஆண்டுகள் முடிந்திருப்பதை கொண்டாடும் வகையில் இந்த நிறுவன உரிமையாளர் 25 ஊழியர்களுக்கு புதிய எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருக்கிறார் .

25 ஊழியர்களுக்கு கார் பரிசு: இந்த 25 ஊழியர்களும் நிறுவனம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த பத்தாண்டு காலமும் நிறுவனத்திற்காக உழைத்துள்ளனர். அவர்களின் சேவையை பாராட்டி agilisium நிறுவனத்தின் உரிமையாளர் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரக காரை அவர்களுக்கு பரிசாக தந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் . சென்னை உலக வர்த்தக மையத்தில் அமைந்திருக்கும் agilisium நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த பத்தாண்டு கால கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்யூவி கார் பரிசளிப்பு: அதில் இந்த 25 ஊழியர்களுக்கும் கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 10 ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வரவேண்டும் என இதன் தலைமை செயல் அதிகாரியான ராஜ் பாபு அறிவித்து இருந்தாரா. இதனை அடுத்து அனைத்து ஊழியர்களும் தங்களுடைய குடும்பத்தினரோடு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஊழியர்கள் கொண்டாட்டம்: அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நிறுவனத்திற்காக வேலை செய்து 25 ஊழியர்களுக்கு அவர் காரினை பரிசாக வழங்கியுள்ளார். இது தவிர பல்வேறு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் . ஊழியர்கலே நிறுவனத்தின் முதுகெலும்பு என குறிப்பிட்டு இருக்கும் agilisium நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ராஜ் பாபு இது போன்ற செயல்பாடுகள் ஊழியர்களை இன்னும் உற்சாகமாக வேலை செய்ய வைக்கும் என கூறியுள்ளார்.

இது நிறுவனத்திற்கு ஊழியர்களுக்கும் இடையே ஒரு உணர்வு ரீதியான இணைப்பை உண்டாக்குகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் . agilisium நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜ்பாபுவால் தொடங்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+