சென்னை ஆலையை தூசு தட்டும் ஃபோர்டு.. மீண்டும் பரபரப்பாகும் மறைமலைநகர் பேக்டரி..!

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியில் முதல்கட்ட வெற்றி முதல்வரின் அமெரிக்க பயணத்தில் நடந்தாலும், தொழிற்சாலை செயல்படாமலேயே இருந்தது. ஆனால் தற்போது ஃபோர்டு நிர்வாகம் தனது செயல்பாடுகளை துவங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃஃபோர்டு மோட்டார், தமிழ்நாட்டின் சென்னை மறைமலைநகர் ஆலையில் முதல் கட்ட செயல்பாடுகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

சென்னை ஆலையை தூசு தட்டும் ஃபோர்டு.. மீண்டும் பரபரப்பாகும் மறைமலைநகர் பேக்டரி..!

இந்த ஆலை 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உற்பத்தியை மீண்டும் தொடங்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முழு வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுமா அல்லது இன்சின் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்திக்கு மட்டுமே இந்த ஆலை பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவான முடிவை ஃபோர்டு நிர்வாகம் இதுவரையில் வெளியிடவில்லை.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஃபோர்டு தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து கூறுகையில், "அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த செயல்முறையில் சிறிது மந்தநிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது பணிகள் மீண்டும் சீராக நடைபெறுகின்றன," என கூறினார்.

ஃஃபோர்டு நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய உதிரிபாகங்களுக்கான லிஸ்டை முடிவு செய்து, தற்போது இதன் தயாரிப்புக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு 25% கடுமையான வரி விதித்தது ஃபோர்டு நிறுவனம் சென்னை தொழிற்சாலை செயல்பாடுகளை துவங்குவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.

ஆனால் தற்போது டொனால்ட் டிரம்ப் ஆட்டோமொபைல் துறை இறக்குமதி மீது விதித்திருந்த வரியைகளை தளர்த்தவும் முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கார், இன்ஜின், உதிரிபாகங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தாலும் பெரும் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்-ன் இந்த முடிவு ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையை மீட்டு எடுக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

2024 செப்டம்பரில், ஃஃபோர்டு மோட்டார் தமிழ்நாடு அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் (LoI) கையெழுத்திட்டு, மறைமலைநகர் ஆலையில் வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு உறுதியளித்தது. இந்த திட்டம் முக்கியமாக ஏற்றுமதி சந்தைகளை குறிவைத்து அமைந்தது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆறு மாதங்கள் கடந்தும் மறைமலை நகர் ஆலையில் எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை.

தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி பணிகளை துவங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய துவங்கியுள்ளது. விரைவில் மறைமலைநகர் தொழிற்சாலை முழு வீச்சில் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+