பெங்களூருக்கு வந்த நிலைமை சென்னை-க்கும் வரலாமா? முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க..!

பெங்களூரு: பெங்களூருவில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பெங்களூருவில் இருக்கும் பணியாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கே திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெங்களூர் மாநகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய மழையின்மை மற்றும் கிணறுகள் வற்றி போனது போன்ற காரணங்களால் தண்ணீர், குறிப்பாக பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பெங்களூருக்கு வந்த நிலைமை சென்னை-க்கும் வரலாமா? முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க..!

இதனால் பெங்களூருவில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்டவற்றுக்கு மாறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

தென் இந்தியாவில் பொறுத்தவரை பெங்களூரு மட்டுமல்ல சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் தண்ணீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களை பொருத்தவரை கர்நாடகா, கேரளா, தெலுங்கானா , தமிழ்நாடு ஆகியவற்றில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15% மக்கள் உள்ளனர். ஆனால் இந்த மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக அளவிலேயே இருக்கிறது.

குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி துறைகளில் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு அதிகரித்து அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால் இங்கெல்லாம் தண்ணீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுக்க கூடும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான நீர் ஆதாரமானது விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது. கிட்டதட்ட 85 சதவீத நீர் ஆதாரம் விவசாயம் மற்றும் மின்சார உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய பயிர்களை நாம் அதிக அளவில் விளைவிப்பதும் தண்ணீரை அதிகம் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் நம்மிடம் அதிகமாக இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் இதுபோன்ற தண்ணீர் பிரச்சனைகள் தொடர்ந்தால் பெருநிறுவனங்கள் இந்த நகரங்களில் தொழில்களை தொடங்க யோசிக்கும். இது நகரத்தின் பொருளாதாரத்தையே பாதிக்கும்.

பருவநிலை மாறுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறிப்பாக பருவம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்டவற்றால் இதுபோன்ற மெட்ரோ நகரங்கள் அதிக அளவில் பாதிக்க கூடும் என ஆய்வறிக்கைகள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளன. எனவே இந்த மாற்றங்களை எல்லாம் தாங்கும் விதத்தில் நகரங்களின் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது.

இல்லையெனில் பெங்களூருக்கு ஏற்பட்ட நிலைமை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஏற்படக் கூடும் . எனவே தண்ணீர் பிரச்னை, மழை வெள்ளம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வகையில் நகரங்களை கட்டமைத்தாக வேண்டும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+