இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே போன்ற புல்லட் ரயில் இணைப்புகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .

இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு இடையிலான பயண நேரம் வெறும் 2.20 மணி நேரமாக குறைந்து விடும். சென்னை மற்றும் ஐதராபாத் இடையிலான புல்லட் ரயில் சேவைக்கான ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகின்றன . இந்த வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .தற்போது தமிழ்நாடு அரசிடம் அது வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை ஐதராபாத் புல்லட் ரயில் சேவைக்கான இந்த விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்யும் . கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த ஆய்வு நடத்தப்படும் என்றும் இதனை அடுத்து தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் திட்டம் இறுதி செய்யப்படும். பின்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திருப்பதி வழியாக புல்லட் ரயில் சேவை செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியதை எடுத்து அதற்கு ஏற்ற வகையில் திட்ட அறிக்கையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல தற்போது சுமார் 12 மணி நேரம் ஆகிறது புல்லட் ரயில் இயக்கப்பட்டால் இந்த 778 கிலோமீட்டர் தூரத்தை 2.20 மணி நேரத்திலேயே சென்று விட முடியும்.
சென்னையில் புல்லட் ரயில் நிலையங்களை அமைப்பதற்கு ஒவ்வொரு ரயில் நிலையத்தை சுற்றியும் 50 ஏக்கர் நிலம் தேவை என தமிழ்நாடு அரசிடம் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால் அடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை விரைந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் புல்லட் ரயிலுக்கு சுரங்க பாதை அமைக்க வேண்டியும் இருப்பதால் இடம் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்குவது சவால் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரயில் வழித்தடம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்க இருக்கும் பகுதிகளில் வீடுகள் , அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருப்பதால் அவற்றுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் எப்படி கட்டுமான பணிகளை திட்டமிடுவது என்பது பெரிய சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications