இந்தியாவில் பல்வேறு நகரங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. முதல்கட்டமாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே போன்ற புல்லட் ரயில் இணைப்புகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் நோக்கத்தில் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .

இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு இடையிலான பயண நேரம் வெறும் 2.20 மணி நேரமாக குறைந்து விடும். சென்னை மற்றும் ஐதராபாத் இடையிலான புல்லட் ரயில் சேவைக்கான ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகின்றன . இந்த வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்திருக்கிறது .தற்போது தமிழ்நாடு அரசிடம் அது வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னை ஐதராபாத் புல்லட் ரயில் சேவைக்கான இந்த விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்யும் . கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த ஆய்வு நடத்தப்படும் என்றும் இதனை அடுத்து தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தால் திட்டம் இறுதி செய்யப்படும். பின்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திருப்பதி வழியாக புல்லட் ரயில் சேவை செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியதை எடுத்து அதற்கு ஏற்ற வகையில் திட்ட அறிக்கையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல தற்போது சுமார் 12 மணி நேரம் ஆகிறது புல்லட் ரயில் இயக்கப்பட்டால் இந்த 778 கிலோமீட்டர் தூரத்தை 2.20 மணி நேரத்திலேயே சென்று விட முடியும்.
சென்னையில் புல்லட் ரயில் நிலையங்களை அமைப்பதற்கு ஒவ்வொரு ரயில் நிலையத்தை சுற்றியும் 50 ஏக்கர் நிலம் தேவை என தமிழ்நாடு அரசிடம் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால் அடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை விரைந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் புல்லட் ரயிலுக்கு சுரங்க பாதை அமைக்க வேண்டியும் இருப்பதால் இடம் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்குவது சவால் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரயில் வழித்தடம் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்க இருக்கும் பகுதிகளில் வீடுகள் , அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருப்பதால் அவற்றுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் எப்படி கட்டுமான பணிகளை திட்டமிடுவது என்பது பெரிய சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications