சென்னையைச் சேர்ந்த ஒருவர் தெருநாய்களுக்கு உணவளிக்க 'சன் ஃபீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட்களை வாங்கியுள்ளார். பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தான் வாங்கிய உள்ளூர் கடையில் விளக்கம் கேட்க சென்றபோது, அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
பின்னர், இதற்கான விளக்கம் கேட்டு ஐடிசி நிறுவனத்தையே நேரடியாக தொடர்பு கொண்டார். இருப்பினும், நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதில் கடுப்பான அவர் வழக்கு தொடுத்து, தற்போது வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் உள்ள எம்எம்டிஏ மாத்தூரைச் சேர்ந்த பி டில்லிபாபு என்பவர் 2021 டிசம்பர் மாதம் மணலியில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடையில் இருந்து விலங்குகளுக்கு உணவளிக்க இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கினார்.
அதில் ஒரு பாக்கெட்டில் பதினைந்து பிஸ்கட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த பிஸ்கட்-ன் ரேப்பரில் இந்த பேக்கேஜிங்கில் 16 பிஸ்கட்கள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்தன. இதற்கான விளக்கம் கேட்டு முயற்சி செய்த போது சரியான பதில் கிடைக்காத காரணத்தால் வழக்கு தொடுத்தார் டில்லிபாபு.
இந்த வழக்கில் டில்லிபாபு ஐடிசி பொது மக்களிடம் தினமும் 29 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளது என தெரிவித்துள்ளார். பிஸ்கட் பேக்கேஜிங்கில் குறிப்பிட்டுள்ளதை விட ஒரு பிஸ்கட்டை குறைவாக வழங்கி, எஃப்எம்சிஜி துறையின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ITC தினமும் 29 லட்சம் ரூபாய்க்கு மேல் பொதுமக்களை ஏமாற்றியதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு பிஸ்கட்டின் விலையும் ₹.75 என்று பி டில்லிபாபு கணக்கிட்டு தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிஸ்கட் உற்பத்தியாளரான ஐடிசி ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்கின்றனர். இதன் அடிப்படையில், அந்த நிறுவனம் பொதுமக்களிடம் தினமும் 29 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக டில்லிபாபு அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலளித்த ஐடிசி நிறுவனம், ரேப்பரில் உள்ள பிஸ்கட்டுகள், பிஸ்கட் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதில்ல, எடையின் அடிப்படையில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிஸ்கட் பாக்கெட்டின் நிகர எடை 76 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்கட் பாக்கெட்டுகளை எடைபோட்டு பார்த்ததில் ரேப்பர் இல்லாமல் பிஸ்கட் பாக்கெட் 74 கிராம் எடை கொண்டு உள்ளது என நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்தது.
கிட்டத்தட்ட 2 வருடமாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடித்ததற்காக ஐடிசி நிறுவனம் இழப்பீடாக 1 லட்சம் ரூபாயை டில்லிபாபுவுக்கு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குறிப்பிட்ட பேட்ச் பிஸ்கட் விற்பனையை முழுமையாக நிறுத்தவும் ஐடிசி நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications