சென்னை: சென்னையின் அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக மட்டுமில்லாமல் மக்களுக்கு விருப்பமான போக்குவரத்து சேவையாகவும் மெட்ரோ ரயில் மாறி இருக்கிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணித்து உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவைகள் தான் மக்களுக்கு கை கொடுக்கின்றன. குறுகிய நேரத்தில் நினைத்து இடத்திற்கு சென்று சேர்க்கின்றன மெட்ரோ ரயில்கள். குறிப்பாக பீக் அவர்களில் பலரின் விருப்பமான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில்கள் மாறி இருக்கின்றன.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட அறிக்கையில் 2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரயிலில் 86,99,344 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 86,65,803 என இருந்து, மார்ச் மாதத்தில் 92,10,069 பேர் என அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் தான் அதிக மக்கள் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக மார்ச் 7ஆம் தேதி அதிகபட்சமாக 3,45,863 பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர். இதில் மார்ச் மாதத்தில் மட்டும் போக்குவரத்து அட்டையை பயன்படுத்தி 9,81,849 பேரும், டோக்கனை பயன்படுத்தி 9,492 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருக்கின்றனர். குரூப் டிக்கெட்டிங் மூலம் 280 பேர், ஆன்லைன் கியூஆர் மூலம் 1,59,364 பேர், பேப்பர் கியூஆர் மூலம் 19,41,919 பேர் பயணம் செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்து 5,84,041 பேரும், பேடிஎம் மூலம் புக் செய்து 4,46,116 பேரும், போன்பே மூலம் 3,60,001 பேரும் பயணித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் கழகம் மெட்ரோ பயண அட்டை, மொபைல் கியூஆர் கோடு, வாட்ஸ்அப், பேடிஎம், போன்பே மற்றும் என்சிஎம்சி அட்டை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் சலுகை வழங்குகிறது.
அதுமட்டுமில்லாமல் மக்கள் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் அமைப்பை பயன்படுத்தி 83000 86000 என்ற எண் மூலமாகவும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் கழகம் நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை போக்குவரத்து வசதியை வழங்கி வருவதே மக்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளது. பயணிகள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் கழகம் கூறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications