சென்னையில் விரைவில் திறக்கப்படவுள்ள "மால் ஆஃப் மெட்ராஸ்" இந்தியாவின் மிகப்பெரிய மொத்த மற்றும் சில்லறை சந்தையாக இருக்கப்போகிறது. இது ஒருங்கிணைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக மையமாக உருவாகும் காரணத்தால் பல துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் அங்கம் வகிக்க உள்ளது.
சௌகார்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் சூளைமேடு போன்ற சென்னையின் பாரம்பரிய வர்த்தக பகுதிகளில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்த Mall of Madras அமைந்துள்ளது.

சென்னையில் மிகப்பெரிய கலப்பு-பயன்பாட்டு வளர்ச்சி திட்டமான ஸ்பிரி சிட்டியின் மையப்பகுதியில் இது அமைந்துள்ளது இந்த மால் ஆப் மெட்ராஸ். மெட்ராஸ் என்பது எமேஷனலான சொல் என்பதால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வர்த்தக மையம் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு சிறந்த இணைப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களும் வியப்படையும் வகையில் பல விஷயங்கள் இங்கு உள்ளது.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மால் ஆப் மெட்ராஸ் சுமார் 12 லட்சம் சதுரடியில் கட்டுப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்த மால் கிட்டத்தட்ட 5 அடுக்குமாடிகளில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் மால்-ன் ஃப்ரடேஜ் மட்டுமே 700 மீட்டர் அளவில் உள்ளது.
மால் ஆப் மெட்ராஸ்-ல் சுமார் 300 கடைகள், 12 ஆங்கர் கடைகள் (முக்கியமான இடத்தில் பெரிய கடைகள்), 9 பிவிஆர் ஸ்கிரீன் தியேட்டர், 2 ஏக்கர் பரப்பளவில் பிராண்ட் மற்றும் மார்கெட்டிங் ப்ரோமோஷன் செய்யும் தளம், 30 உணவு வகைகளுக்கு (Cusines) பிரத்தியேக உணவகங்கள், புட் கோர்ட், 3 தளத்தில் சுமார் 1500 கார் பார்க் செய்யப்படும் அளவுக்கு பார்க்கிங் வசதி.

இந்த மாலில் லைப்ஸ்டைல், பேஷன், எலக்ட்ரானிக்ஸ், நகைகள், பொம்மைகள், ஆக்சசரீஸ், விளையாட்டு மற்றும் லெசூர், பழங்கால பொருட்கள், ஹைப்பர்மார்கெட், காஸ்மெட்டிக்ஸ், ஹோம் பர்னிஷிங் என பிரிவுகளில் கடை வர உள்ளது.
மால் ஆப் மெட்ராஸ் பொதுமக்கள் திறப்பிற்குப் பின்பு தினமும் குறைந்தது 40 லட்சம் பேர் வருவார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதேபோல் வட சென்னை பகுதியில் அமைய உள்ள மிகப்பெரிய மால் இது என்பது குறிப்பிடத்தக்கது, மொத்த மால் கட்டமைப்பும் ஒரு ஏர்போர்ட் ஸ்டைலில் அமைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications