இந்தியாவில் எப்படி புதிய வீடுகள் விற்பனை மிகவும் முக்கியமோ, இதைவிடவும் முக்கியம் அலுவலக ரியல் எஸ்டேட். காரணம், அதிகப்படியான வேலைவாய்ப்புகள், வர்த்தகம் உருவாக்கப்படுவதை அலுவலக ரியல் எஸ்டேட் வர்த்தக வளர்ச்சியைக் கொண்டு எளிதாகக் கணக்கிட முடியும்.
2024 நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் அலுவலக இட செயல்பாடுகள் மந்தமாகவே இருந்துள்ளது எனப் பிரபல ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான ANAROCK தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிய அலுவலகங்கள் நாள்தோறும் திறக்கப்பட்டாலும், சந்தையில் காலியாக இருக்கும் அலுவலக இடங்கள் அதிகமாகவே உள்ளது.

2024 நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் மொத்த அலுவலக இடங்களின் ஒப்பந்தம் மற்றும் நிறைவு பெற்ற இடங்கள் அளவீடு ஆகிய இரண்டும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மந்தமான நிலையில் உள்ளது என ரியல் எஸ்டேட் அமைப்பான ANAROCK தெரிவித்துள்ளது.
நாட்டின் டாப் ஏழு நகரங்களில் புதிய அலுவலக விநியோகம் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் நிகர அலுவலகப் பயன்பாடு அல்லது ஒப்பந்தம் அளவு முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் 1 சதவிகிதம் அளவிற்குக் குறைந்துள்ளது என ANAROCK தெரிவித்தது.
இதில் முக்கியமான விஷயம், நாட்டின் டாப் 7 நகரங்களில் சராசரி வாடகை அளவு 7 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் நாட்டின் 7 நகரங்களில் கிரேடு A அலுவலக வாடகை மாதத்திற்குச் சராசரியாக ஒரு சதுரடிக்கு 83 ரூபாய் என்று ANAROCK ஆராய்ச்சித் தரவு குறிப்பிடுகிறது. இது 2023 ஆம் நிதியாண்டில் ஒரு சதுர அடிக்கு ரூ.77.5 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் சென்னையில் அதிகப்படியாக வாடகை அளவு 10 சதவீதம் உயர்ந்து ஒரு சதுரடிக்கு 62 ரூபாயில் இருந்து 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாத்-ல் அலுவலக வாடகை இதே காலகட்டத்தில் 8 சதவீதம் உயர்ந்து 61 ரூபாயில் இருந்து 66 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பெங்களூர், புனே, கொல்கத்தா ஆகியவை தலா 7 சதவீதம் அளவில் வாடகை அதிகரித்துள்ளது. மும்பை மற்றும் டெல்லி என்சிஆர் பகுதியில் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications