சென்னை மழையின் ருத்ர தாண்டவம் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது, பணக்காரர்கள், ஏழை மக்கள், பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என வேறுபாடு இல்லாமல் பாதித்துள்ளது. சமுக வலைத்தளத்தில் ஒருபக்கம் மக்கள் உதவிகளைத் தொடர்ந்து கேட்டு வரும் வேளையில் ஒருபக்கம் இயல்பு நிலை திரும்பியதால் அலுவலகம் செய்யத் துவங்கியுள்ளனர்.
இதேபோன்ற சம்பவம் தான் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது, பெங்களூரில் பெய்த கனமழை காரணமாகப் பல ஆடம்பர குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கியது, பல ஆடம்பர கார்கள் தண்ணீர் மூழ்கியது, ஐடி ஊழியர்கள் JCB இயந்திரத்தில் வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் சென்றனர்.

இதற்கு மத்தியில் சென்னையின் தொழிற்பேட்டையான அம்பத்தூர் பகுதியில் இருக்கும் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் மார்பு அளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் அம்பத்தூர் ஏரி வழியாகத் தான் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மழை நீர் வடியும்.
இதனால் 3வது நாளாக அம்பத்தூர் பகுதியில் இன்றும் பல தொழிற்சாலைகள் தண்ணீரில் மிதக்கிறது, தொழிற்சாலையில் இருக்கும் ஒவ்வொரு இயந்திரமும் பல லட்சம் மதிப்புடையது என்பதால் சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் உரிமையாளர்கள் இந்த இழப்பை எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள் எனத் தெரியாமல் புலம்பி வரும் வீடியோ, டிவிட்டர் பதிவுகள் ஏராளமாக இணையத்தில் உள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் இன்று காலையில் பாடி-யில் இருக்கும் டிவிஎஸ் தொழிற்சாலையின் புகைப்படம் வெளியானது. டிவிஎஸ் தொழிற்சாலை நுழைவு வாயிலில் இருந்து தொழிற்சாலையின் இறுதி வரையில் இடுப்பு அளவுக்கு மழை நீர் தேங்கி இருக்கிறது.
இதனால் லூகாஸ் டிவிஎஸ் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்கள், உதிரிபாகங்கள், உற்பத்தி பொருட்கள் அனைத்தும் மழைநீர் மூழ்கியுள்ளது. பொதுவாகப் பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற இயற்கை பேரிடர் பிரச்சனையைச் சமாளிக்க இன்சூரன்ஸ் பாதுகாப்பு வைத்திருக்கும்.
அடுத்த சில நாட்களுக்குப் பாடி லூகாஸ் டிவிஎஸ் தொழிற்சாலையின் உற்பத்தி பாதிக்கும், ஆனால் இதைச் சமாளிக்கும் வகையில் பிற தொழிற்சாலையில் உற்பத்தியை ஈடு செய்ய முயற்சி செய்யலாம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications