சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக பலதரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். இதில் முக்கியமானது வேளச்சேரி பிரிட்ஜ்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் பெய்த கனமழையின் போது, வேளச்சேரி ஏரி நிரம்பி வழிந்ததால், இந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. பல நூறு வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த முறை ரெட் அலர்ட் வந்த உடனே மக்கள் தங்களது வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வந்தனர்.

ஆனால் இன்னும் சிலர், குறிப்பாக அப்பார்ட்மென்ட் வீடுகளில் வாழும் மக்கள் ஒரு படிக்கு மேல் சென்று, பார்க்கிங்-ல் இருக்கும் இரு சக்கர வாகனங்களை ஒவ்வொரு ப்ளோரிலும் அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மழையில் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது மட்டும் அல்லாமல் பல ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்லாயிரம் கார்கள், பைக்குகள் மழை வெள்ளத்தில் மூழ்கியது. பல கார்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார்.

இதன் வாயிலாகவே நேற்று வேளச்சேரி பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குப் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்தும் கார்களை அகற்ற மறுப்பு தெரிவித்தது. தற்போது பைக்குகளை லிப்ட் வாயிலாக மேல் தளத்திற்கு கொண்டு செல்லுவது வரையில் நடக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைத்தாலும் முழு பணிகளுக்கு கிடைப்பது இல்லை, இதேபோல் கிளைம் தொகையை பெறுவதற்குள் பெரிய தலைவலியாக உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை ரிப்பேர் செய்ய இன்சூரன்ஸ் கிளைம் தாண்டி 30000 முதல் 1 லட்சம் வரையில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications