சென்னை: மக்கள் தங்களுடைய வார இறுதி நாட்களிலும் கோடை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை காலங்களிலும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு சென்று குடும்பத்துடன் மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் ஏற்கனவே பல்வேறு பொழுது போக்கு பூங்காக்கள் இருக்கின்றன.
இருந்தாலும் வொண்டர்லா (wonderla ) நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது . ஏனெனில் தமிழ்நாட்டில் வொண்டர்லா நிறுவனம் அமைக்கும் முதல் பொழுது போக்கு பூங்கா இதுவாகும். சென்னை அருகே வொண்டர்லா நிர்வாகம் தன்னுடைய புதிய பொழுதுபோக்கு பூங்காவை அமைத்து வருகிறது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் இந்தியாவின் பெரிய ரோலர் கோஸ்டர் கட்டப்பட்டிருக்கிறது. அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது .

தமிழகத்தில் சென்னை அருகே திருப்போரூர் அடுத்த இள்ளளூர் பகுதியில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் வொண்டர்லா நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.
First test ride at India's Largest Roller Coaster coming up at Wonderla Chennai...😍🎢
— Chennai Updates (@UpdatesChennai) May 26, 2025
pic.twitter.com/uTwyXZwJZw
பல்வேறு திரில்லிங்கான ரைடுகள் இங்கே கட்டப்பட்டிருக்கின்றன குழந்தைகள் மற்றும் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வொண்டர்லா கட்டுமான பணிகள் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் வொண்டர்லாவில் இந்தியாவின் பெரிய ரோலர் கோஸ்டர் வெற்றிகரமாக கட்டப்பட்டு முடித்திருப்பதாக அதன் நிர்வாக இயக்குனரான அருண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ்ட்ரா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் வொண்டர்லாவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டரில் சோதனை ஓட்டம் நடக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
புதிய ரோலர் கோஸ்டரில் சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். தற்போது பூங்கா கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு டிசம்பரிலேயே இது பயன்பாட்டிற்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்த வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது அது அமைந்துள்ள பகுதி ஒரு சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் சுற்றுலா தலமாகவும் மாறும்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தன்னுடைய பொழுதுபோக்கு பூங்காவை சென்னை அருகே அமைகிறது வொண்டர்லா நிறுவனம். மக்களை ஈர்ப்பதற்காக புது புது ரைடுகள் இங்கே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் கொச்சி ,பெங்களூரு ,ஹைதராபாத், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் எல்லாம் பல வித்தியாசமான ரைடுகளுடன் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications