சென்னையில் நிறுவனம் விரிவாக்கம்.. அமெரிக்க நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்கிறது. பல GCC-களும் சென்னையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது 2 நிறுவனங்கள் சென்னையில் தங்களுடைய அலுவலகங்களை விரிவுபடுத்தியுள்ளன. சமீபத்திய X தள தகவலின்படி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி லிமிடெட் மற்றும் அமெரிக்காவின் வெரைசன் ஆகிய நிறுவனங்கள், சென்னையில் தங்களது அலுவலக இடங்களை விரிவாக்கியுள்ளன.

ஹிட்டாச்சி எனர்ஜி, தனது தற்போதைய அலுவலகமான காமர்சோன் போரூரில் மேலும் 90,000 சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. சென்னையில் செயல்படும் இந்த நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட் மையமாக செயல்பட்டு வருகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

 சென்னையில் நிறுவனம் விரிவாக்கம்.. அமெரிக்க நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

இதேபோல், தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான வெரிசன், ஒலிம்பியா பார்க்கில் 45,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக வெரிசன் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய செயல்பாட்டை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வந்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவும். அதேபோல தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நிறுவனங்களாலும் சென்னையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பல்வேறு முன்னணி IT நிறுவனங்களும் பணி நீக்கங்களை செய்து வரும் நிலையில் தற்போது இந்த 2 நிறுவனங்கள் தங்களுடைய விரிவாக்கத்தை அறிவிப்பதால் டெலிகாம் மற்றும் ரிசர்ச் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

 சென்னையில் நிறுவனம் விரிவாக்கம்.. அமெரிக்க நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

சென்னைக்கு புதிய நிறுவனங்கள் படையெடுத்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களும் தங்களுடைய வர்த்தகத்தை விரிவாக்க தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் அலுவலகம் மற்றும் ரியல் எஸ்டேட்டுக்கான தேவை வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இந்த விரிவாக்கம் மட்டுமின்றி கோயம்பத்தூரிலும் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் எல்காட் ஐடி பார்க்கை வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி அன்று திறந்து வைக்க உள்ளார். இந்த ஆறு மாடி கட்டிடம் சுமார் 2.66 லட்சம் சதுர அடியில் இயங்கவுள்ளது. சுமார் ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 14,000-த்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இது போன்ற வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+