இனி சென்னை - திருப்பதி பயணம் 45 நிமிடங்களாக குறையும்.. செப்டம்பரில் புதிய நெடுஞ்சாலை திறப்பு..!!

சென்னை - திருப்பதி இடையேயான பயண நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை குறையப்போகிறது. இதற்கு காரணம், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே 18 கிமீ தொலைவு கொண்ட 4 வழித்தட பசுமை நெடுஞ்சாலையின் பணிகள் வரும் செப்டம்பரில் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. இந்த நெடுஞ்சாலை திருப்பாச்சூரில் உள்ள திருவள்ளூர் பைபாஸையும், திருநின்றவூரில் உள்ள வெப்பம்பட்டு பைபாஸையும் இணைக்கிறது.

மொத்தம் 18 கிமீ தொலைவு கொண்ட சாலையில், 15 கிமீ வரையிலான பணிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதியே முடிக்கப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் கூறியுள்ளது. இத்திட்டம் முடிந்தப் பின், இந்தப் பகுதி முழுமையாக வேலிவீச்சுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும். திருவள்ளூர் மற்றும் வெப்பம்பட்டு நகரங்களின் பெரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பயண நேரம் குறைவதுடன் பாதுகாப்பும், எரிபொருள் சிக்கனமும் மேம்படும். அதேபோல், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே உள்ள இருவழிச்சாலையை தவிர்த்து செல்லவும் இந்த புதிய சாலை உதவும்.

இனி சென்னை - திருப்பதி பயணம் 45 நிமிடங்களாக குறையும்.. செப்டம்பரில் புதிய நெடுஞ்சாலை திறப்பு..!!

திருப்பதி மற்றும் திருத்தணிக்கு செல்பவர்கள் திருவள்ளூர், வெப்பம்பட்டு போன்ற நெரிசலான பகுதிகளை தவிர்த்து நேராக செல்ல முடியும். சென்னை - திருப்பதி இடையேயான பயண நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை குறையும். இந்த திட்டம் முழுமையாக முடிந்ததும், சென்னை - திருப்பதி பயணம் வேகமாகவும், சீராகவும், பாதுகாப்பாகவும் அமையும். இது பக்தர்கள், வணிக பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் நன்மையாக இருக்கும்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருநின்றவூர் முதல் திருப்பதி வரை 62 கிலோமீட்டர் நீளமான இந்த பாதை, முழுமையாக பாதுகாப்பு கம்பியால் சூழப்பட்டு, இரு பக்கங்களிலும் சேவை சாலைகள் கொண்டதாக இருக்கும். இந்த பரப்பளவு விரிவாக்கப் பணிகள் 2022 ஆம் ஆண்டில் ரூ.304 கோடி செலவில் துவங்கப்பட்டது.

திருநின்றவூர் - திருவள்ளூர் பைபாஸ் பகுதியில் எதிர்காலத்தில் கூடுதல் நிலம் வாங்காமல், 6 வழிச்சாலை பாதையாக விரிவாக்கப்பட வாய்ப்புள்ளது. இதே நேரத்தில், திருவள்ளூர் முதல் தமிழ்நாடு-ஆந்திரா எல்லை வரை உள்ள 44 கிலோமீட்டர் பகுதியில் 4 வழிச்சாலை மேம்படுத்தும் பணிகள் கடந்தாண்டு ரூ.750 கோடியில் துவங்கியுள்ளன. இத்திட்டம் தற்போது 12% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

ஏற்கனவே பாடி - கொரட்டூர் சந்திப்பில் தொடங்கும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை, திருநின்றவூர் வரை 22 கிமீ வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது. இந்தப் பகுதியில் 6 வழிச்சாலையாக விரிவாக்க திட்டம் மாநில நெடுஞ்சாலை துறையால் முன்மொழியப்பட்டாலும், நிலம் அபகரிப்பு பிரச்சனையால் பணி தொடங்கவே இல்லை.

கொரட்டூரை சேர்ந்த சி. ரமேஷ் வரதன் கூறுகையில், "பாடியில் இருந்து திருவள்ளூர் வரை 35 கிமீ பயணிக்க முழு 2 மணி நேரம் ஆகிறது. CTH சாலையில் ஒவ்வொரு 200 மீட்டருக்கும் ஒரு வேகத்தடை உள்ளது. ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. எனவே, பாடியிலிருந்து திருநின்றவூர் வரை உயர்மட்டச் சாலை அமைப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+