தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது, இதனால் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கனமழையை ஏற்படுத்தி வருகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, டிசம்பர் 3 (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சென்னையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இதை உறுதிப்படுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் தனது X பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சினேகா முன்பு அறிவித்த நிலையில், இதை திருத்தி பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 3ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை (டிசம்பர் 3) நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த மழை காரணமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல பகுதிகளை பாதித்துள்ளது. மீன் பிடி, கடல் பயணம் தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இந்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தென்-மேற்கு திசையில் நகர்ந்து, 8 கி.மீ. வேகம் அதிகரித்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்?
இலங்கை அருகே இருந்த டிட்வா புயல் இப்போது முழுக்க வலுவிழந்து ஒரு சாதாரண காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) மாறிவிட்டது. இது சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவில் கடலில் இருக்கிறது என IMD தனது சமீபத்திய கணிப்பில் தெரிவித்துள்ளது.
புயல் எங்கே இருக்கிறது?
சென்னையிலிருந்து தெற்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும்
புதுச்சேரியிலிருந்து வடகிழக்கே 60 கி.மீ. தொலைவிலும்
கடற்கரையிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. அதாவது கரைக்கு மிக அருகில் இருக்கிறது.
எப்படி நகர்கிறது?
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு வெறும் 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக தென்மேற்கு திசையில் (புதுச்சேரி-சென்னை கரை பக்கம்) நகர்ந்து வருகிறது.
அடுத்து என்ன ஆகும்?
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் கரைக்கு அருகில் வந்து, புயலின் அச்சம் இல்லாமல் வெறும் தாழ்வுப் பகுதியாக (Well-marked Low Pressure) முழுக்க வலுவிழந்துவிடும் என IMD கணித்துள்ளது.
இப்போது என்ன பாதிப்பு?
புயல் இல்லை என்றாலும், இந்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி பகுதிகளில் இன்று (டிசம்பர் 2) மாலை முதல் நாளை வரை கனமழையும் சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள டாப்ளர் ரேடார்கள் 24 மணி நேரமும் IMD இதை கண்காணித்து வருகின்றது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் புயல் முழுக்க வலுவிழந்துவிட்டது. ஆனால் கரைக்கு ரொம்ப அருகில் இருப்பதால் இன்னும் 12-24 மணி நேரம் கொஞ்சம் கனமழை பெய்யும். அதனால் பள்ளி-கல்லூரி விடுமுறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நாளை மறுதினம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications