இந்தியாவில் தற்போது பெரு நகரங்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ,சுற்றுச்சூழல் பாதிப்பு உள்கட்டமைப்பு , மக்கள் தொகை பெருக்கம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன.
வேலை வாய்ப்பு , கல்விக்காக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு படை எடுக்கிறார்கள். ஆனால் இந்த மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அங்கே வசதிகள் இருப்பது கிடையாது. இந்த நிலையில் தான் இது போன்ற பெரு நகரங்களுக்கு அருகிலேயே துணை நகரங்களை உருவாக்கும் பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் சென்னைக்கு அருகிலேயே சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குளோபல் சிட்டி அதாவது சர்வதேச நகரம் ஒன்று உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பை எடுத்து சென்னைக்கு அருகே எந்த பகுதியில் இந்த குளோபல் சிட்டி அமையும் என அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
சென்னையில் இந்த குளோபல் சிட்டி என்பது சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும் இதற்காக சென்னைக்கு அருகே நான்கு இடங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமான டிட்கோ அடையாளம் கண்டு அந்த பட்டியலை தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது. நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ,தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், உயர்தர கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு நகரமாக இது உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது .

இதற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான இடம் தமிழ்நாடு அரசுக்கு தேவைப்படுகிறது .எந்த பகுதியில் அமையும் இந்த குளோபல் சிட்டி அமையும் என்று எதிர்பார்ப்பு நீடித்திருந்த நிலையில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய சர்வதேச நகரத்தை அமைக்க மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக டெண்டர் கோரி இருக்கிறது.
ஐடி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் ,வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ,வர்த்தக மையங்கள், கல்வி நிறுவனங்கள் என உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக இந்த நகரம் உருவாக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப சாத்தியங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் மாஸ்டர் பிளான் தயாரிக்கவும் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரி இருக்கிறது .
இந்த டெண்டர் அறிவிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த மக்களுக்கு பெரிய அளவிலான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இந்த திட்டம் மூலம் மதுராந்தகம் பகுதி பெரிய அளவிலான வளர்ச்சி பெறும் என்பதை மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக நிலங்களின் மதிப்புகள் பல மடங்கு உயர போகின்றன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications