சென்னைவாசிகளை அதிரவைத்திருக்கும் அளவிற்கு வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதுதான். கடந்த சில மாதங்களாக, சென்னையில் வீடு தேடுபவர்கள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு காலத்தில் எளிதாகக் கிடைத்த வாடகைக் குடியிருப்புகள், இப்போது எட்ட முடியாத விலைக்கு உயர்ந்திருப்பது, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
மெட்ரோ திட்டம், ரிங் ரோடு, ஐடி காரிடர் விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை நகரின் பல இடங்களில் வாடகை உயர்விற்கு காரணமாகியுள்ளன 250க்கும் மேற்பட்ட GCC நிறுவனங்களும் இந்த உயர்விற்கு காரணமாகின்றன. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் இதற்கு காரணமாகின்றன. அதேபோல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான குடியிருப்புகளை மக்கள் தேடுவதும் ஒரு காரணமாகின்றன.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வாடகையில் கிடைத்த ஒரு 2BHK வீடு, இப்போது ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வாடகைக்குக் கோரப்படுகிறது. போரூரில் 2BHK வீடுகளின் வாடகை சுமார் ரூ.16,000 முதல் ரூ.22,000 வரை உயர்ந்துள்ளது. சில முக்கியப் பகுதிகளில் இந்த வாடகை உயர்வு இன்னும் அதிகமாக உள்ளது. இந்த திடீர் வாடகை உயர்விற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்கள் யாவை?
வாடகை உயர்வுக்கான காரணங்கள்: இந்த வாடகை உயர்வுக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், நகரத்திற்கு வெளியே சென்று சொந்த ஊர்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளனர். இந்த திடீர் தேவை அதிகரிப்பால், வாடகை வீடுகளின் எண்ணிக்கை குறைந்து, வாடகை விலை உயர்ந்தது.
இரண்டாவதாக, நகரத்தின் முக்கியப் பகுதிகளான ஓஎம்ஆர் (OMR), வேளச்சேரி, ஆவடி, கொளத்தூர், குரோம்பேட்டை, வளசரவாக்கம், அடையாறு, அசோக் நகர் மற்றும் போரூர் போன்ற இடங்களில், புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இருக்கும் வீடுகளுக்கும் தேவை அதிகமாக இருப்பதால், வீட்டு உரிமையாளர்கள் அதிக வாடகையைக் கேட்கின்றனர்.
மூன்றாவதாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பணவீக்கம் காரணமாக, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததால், வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இது, பல வீடுகளில் மாதம் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.
நோ புரோக்கர் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் ஆவடி, வேளச்சேரி, கொளத்தூர், குரோம்பேட்டை, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 10% முதல் 12% வரை வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாகவும், இவை மேலும், 6 முதல் 12 மாதங்களில் ஓஎம்ஆர் மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் 10% முதல் 15% வரை உயரும் என கூறியுள்ளது. சிறுசேரியில் 2BHK வீடுகள் வாடகை ரூ.11,000 முதல் ரூ.18,000 வரையும், மேடவாக்கத்தில் ரூ.11,800 முதல் ரூ.15,200 வரையிலும் உயர்ந்துள்ளது. கேளம்பாக்கத்தில் ரூ.12,000 முதல் ரூ.19,000 வரையிலும் உயர்ந்துள்ளது.
அதேபோல், 3BHK வீடுகள் ரூ.50,000-ஐ தாண்டியுள்ளது. குறிப்பாக, தி நகர், அடையாறு போன்ற பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளின் வாடகை உச்சத்தை அடைந்துள்ளது. இது முன்னர் ரூ.35,000 முதல் 42,000 ஆக மட்டுமே இருந்தது.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் நிலை: இந்த வாடகை உயர்வு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பணியாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,000க்கு கிடைத்த தனி அறைகள் இப்போது ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை வாடகைக்குக் கிடைக்கிறது. இதனால், பலர் தங்கள் நண்பர்களுடன் இணைந்து ஒரு வீட்டைக் கூட்டாக வாடகைக்கு எடுத்து, செலவுகளைச் சமாளிக்க முயற்சிக்கின்றனர்.
மேலும், குடும்பத்துடன் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர், தங்களது மாத வருவாயில் பெரும் பகுதியை வாடகைக்கே ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால், சேமிப்பு பாதிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இடத்திற்கு அருகில் வாடகைக்கு வீடு தேட முடியாதவர்கள், தொலைதூர புறநகர் பகுதிகளுக்குச் சென்று, தினசரி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது அவர்களின் பணி-வாழ்க்கை சமநிலையையும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.
தீர்வு என்ன?: இந்த வாடகை உயர்வு ஒரு சிக்கலான பிரச்சனை. இதற்கு உடனடித் தீர்வு எதுவும் இல்லை. இருப்பினும், சில வழிகள் உள்ளன
சரியான பகுதிகளைத் தேர்வு செய்தல்: முக்கிய ஐடி ஹப்களுக்கு அருகிலுள்ள பகுதிகளை விட, சற்றுத் தொலைவில் உள்ள புறநகர் பகுதிகளைத் தேர்வு செய்யலாம். உதாரணமாக, ஓஎம்ஆர் பகுதிக்கு அருகில் உள்ள செம்மஞ்சேரி, காரப்பாக்கம் போன்ற பகுதிகளில் குறைந்த வாடகையில் வீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
புரோக்கர்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள்: நம்பகமான புரோக்கர்கள் அல்லது ஆன்லைன் தளங்கள் மூலம் வீடுகளைத் தேடுவது, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்.
பேச்சுவார்த்தை: வீட்டு உரிமையாளரிடம் வாடகையைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தலாம். சில நேரங்களில், இந்த முயற்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
சென்னையின் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதன் வாழ்க்கைச் செலவு பலருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. வாடகை உயர்வு, எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அரசு மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் இணைந்து, மலிவு விலையில் வீடுகளைக் கட்டும் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications