பெங்களூரில் ஒரு நபர், தான் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் ஒரு துண்டு சிக்கன் கூட இல்லாததைக் கண்டு உணவகம் மீது வழக்குத் தொடுத்து 1000 ரூபாய் வென்றுள்ளார். பெங்களூர் நகரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உணவகத்திற்குத் தொகையைச் செலுத்தவும், வாடிக்கையாளருக்கு 150 ரூபாயைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டதாகத் தீர்ப்பு கொடுத்துள்ளது.
மேற்கு பெங்களூர் பகுதியில் மிகவும் பிரபலமான பகுதிகளில் ஒன்றான நாகர்பாவியில் வசிக்கும் கிருஷ்ணப்பா என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு திடீரென இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ந்து போனது. அவரும் அவரது மனைவியும் ஐடிஐ லேஅவுட்டில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்திற்குச் சென்று, சிக்கன் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தனர்.

அவர்கள் பார்சலுடன் வீட்டிற்கு வந்து அதைத் திறந்தபோது, பிரியாணியில் சாதம் மட்டுமே இருந்துள்ளது, ஒரு துண்டு இறைச்சி கூட இல்லை என்பது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இதில் கடுப்பான கிருஷ்ணப்பா உணவகத்திற்குப் போன் செய்து, பிரச்சனையை விளக்கினார், பிரச்சனையைப் புரிந்துகொண்டு சிக்கன் துண்டுகளுடன் மற்றொரு பிரியாணியை வீட்டிற்கு வழங்குவதாக உணவகம் உறுதியளித்தது.
இரண்டு மணி நேரமாகியும் உணவு வராததால், வீட்டில் கொண்டு வந்த இறைச்சியில்லா பிரியாணியை, கிருஷ்ணப்பா-வும் அவருடைய மனைவியும், சாப்பிட்டனர். கோபமடைந்த கிருஷ்ணப்பா மீண்டும் உணவகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் பலனளிக்கவில்லை.
இதே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில், உணவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து சட்டப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார், அதற்கு உணவகத்திலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் தனக்கும் அவரது மனைவிக்கும் என்ன நடந்தது என்று பெங்களூரு நகர்ப்புற நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.
கிருஷ்ணப்பா 150 ரூபாய் கொடுத்து வாங்கிய உணவுக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வாடிக்கையாளர் கோரினார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் நுகர்வோர் நீதிமன்றம் உணவக நிர்வாகம், கிருஷ்ணப்பா மற்றும் அவரது மனைவிக்கும் மன வேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டது. உணவகத்துக்கு இழப்பீடாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும், கிருஷ்ணப்பாவுக்குப் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 1000 ரூபாய் + 150 ரூபாய் உடன் 1150 ரூபாய் தொகையை உணவக நிர்வாகம் சமீபத்தில் செலுத்தியது. இதன் மூலம் இந்த வழக்கு நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்கு பிரபலமடைந்துள்ளது.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications