மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கேவி சுப்பிரமணின் தனது 3 ஆண்டு பணி காலம் முடிந்த நிலையில், பணி நீட்டிப்பை விரும்பாத அவர் இப்பதிவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கேவி சுப்பிரமணியன் டிவீட்
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், என்னுடைய பணி காலத்தில் அரசிடம் இருந்து அதிகப்படியான ஒத்துழைப்பும், ஊக்கம் கிடைத்தது. பல உயர் அதிகாரிகளுடன் பணியாற்றி அனுபவம் வரமாக இருக்கிறது. கடந்த 30 வருட பணி காலத்தில் பிரதமர் மோடியை போல் தலைவரை நான் பார்த்து இல்லை என தெரிவித்துள்ளார்.
தலைமை பொருளாதார ஆலோசகர்
கேவி சுப்பிரமணியன் தலைமை பொருளாதார ஆலோசகராக டிசம்பர் 7, 2018ல் பதவியேற்றார், இவர் பதவியேற்றிய 5 மாதத்தில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பதிவி விலகினார். தற்போது அரவிந்த் சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
நிர்மலா சீதாராமன்
மேலும் கேவி சுப்பிரமணியன் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பலமுக்கியமான விஷயத்தின் அவர்களின் அறிவுறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ட
இதேோடு அவர் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கு தான் பணியாற்றியதை பெருமையான விஷயமாகவும், தன் வாழ்நாள் சாதனையாகவும் கருதுகிறார்.
தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்
கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் என்பதன் சுருக்கமே கேவி சுப்பிரமணியன். இவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்.
கல்வி தகுதி
இவர்ஐஐடி கான்பூரில் பிடெக், ஐஐஎம் கல்கத்தாபில் எம்பிஏ, சிகாகோ பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர். இவர் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதியேற்றியற்கு முன்பு இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் கல்லூரியில் ஆசிரியர்காகவும், நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுனாரகவும் இருந்தார்.
ரகுராம் ராஜன்
மேலும் இவர் சிகாகோ பல்கலைகழகத்தில் பிஹெச்டி பட்டத்தை முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவரும், தற்போதைய தமிழ்நாடு பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் ரகுராம் ராஜன் மேற்பார்வையில் தான் பெற்றார்.
முக்கிய நிறுவனங்கள்
கல்லூரி படிப்படை முடிந்த கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் ஜேபி மோர்கன் சேஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் பந்தன் வங்கி மற்றும் தேசிய வங்கி நிர்வாக கல்லூரி மற்றும் ஆர்பிஐ அகாடமியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
இதோடு செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கிய பதவிகளிலும் கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications