லடாக் எல்லை பிரச்சனையை தொடர்ந்து இந்திய சீன பொருட்களை தவிர்க்க முயற்சி செய்து வந்தது. அந்த சமயத்தில் சீன பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரை நாடு முழுவதும் எழுந்தது. அரசும் சில கடுமையான விதிமுறைகளை விதித்தது.
சில பொருட்களுக்கு வரிகளை கூட கூட்டியது. ஆனாலும் இப்படி ஒரு மோசமான நிலைகளுக்கும் மத்தியிலும் கூட, சீனா தான் மீண்டும் சிறந்த வர்த்தக பங்காளியாக உருவெடுத்துள்ளது.
எப்படி என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். கடந்த ஆண்டில் கொரோனாவுக்கு மத்தியில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் என்பது மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
சீனா தான் டாப்
அப்படி இருந்தாலும் வழக்கம்போல அண்டை நாடுகளை விட, சீனா தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களியாக உள்ளது. கடந்த 2017, 2018, 2020களில் அமெரிக்காவினை சீனா தான் முன்னிலையில் வர்த்தக பார்ட்னராக இருந்துள்ளது. கடந்த 2019ல் மட்டும் தான் அமெரிக்கா சீனாவினை விட சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்துள்ளது.
இரு தரப்பு வர்த்தகம்
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தக தரவுகளின் படி, கடந்த ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் 77.7 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 85.5 பில்லியன் டாலர்களாகும். இது முந்தைய ஆண்டினை காட்டிலும் சற்று குறைவு தான் என்றாலும், மொத்தத்தில் பார்க்கும் போது சீனா தான் இந்தியாவுடன் அதிக வர்த்தகம் செய்துள்ளது.
வர்த்தக இடைவெளி
மத்திய அரசு நூற்றுக்கணக்கான சீன ஆப்களை தடை செய்தது. முதலீட்டு விதிகளை கடுமையாக்கியது. எல்லையில் இந்தியா சீனா இடையே கடுமையான போக்கே அந்த சமயத்தில் நிலவியது. எனினும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கனரக இயந்திரங்களையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. அதோடு தொலைத் தொடர்பு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் சீனாவினையே அதிகம் சார்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த தரப்பு வர்த்தக இடைவெளியாக 2020ம் நிதியாண்டில் 40 பில்லியன் டாலராக இருந்தது.
சீன இறக்குமதி
சீனாவில் இருந்து மொத்த இறக்குமதி 2020ம் ஆண்டில் 58.7 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதே இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அதனையடுத்து UAEம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ஏற்படும் தேவை இடையூறுகளுக்கு மத்தியில், இந்தியா அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்க முடிந்தது.
சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு
அதே சமயம் முந்தைய ஆண்டை காட்டிலும் சீனாவிற்கான ஏற்றுமதியினை 11% அதிகரித்துள்ளது. எனினும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஏற்றுமதியும் குறையுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா உள் நாட்டு உற்பத்தியினை ஊக்கப்படுத்தி வருகின்றது. இது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications