2025 ஆம் ஆண்டில் இந்தியா மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறியது ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல். சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டினை அடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டது. பின்னர் நிலைமை தணிந்தது. இந்த சூழலில் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தின் போது சீனா இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது என அமெரிக்கா வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

சீனா இந்தியாவிடம் இரட்டை முகத்தை காட்டுவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கை தந்து இருப்பதாக சிஎன்என் நியூஸ் 18 சேனலில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் தந்திருக்கக்கூடிய ஆய்வறிக்கையின் படி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனா பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவிகளை செய்தது எனக் கூறியிருக்கிறது.

அதாவது சீனாவை பின்னணியாக கொண்டுதான் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சுட்டி காட்டி இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பாகிஸ்தானுக்கு தகவல்களை வழங்குவது, சைபர் செயல்பாடு, உளவுத்துறை ஆதரவு மற்றும் ராஜாங்க ரீதியிலான பல்வேறு உதவிகளை சீனா தந்தது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீனாவின் சாட்டிலைட் கவரேஜ் மற்றும் எலக்ட்ரானிக் உளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பான பல துல்லிய தகவல்களை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அமெரிக்க ராணுவ தலைமையகம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சீனாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இந்த அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது . அதில் பாகிஸ்தானுக்கு சீனா பல்வேறு நவீன ஆயுதங்களையும் போர் விமானங்களையும் வழங்கி உதவி செய்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அமெரிக்க உளவுத்துறை இந்தியாவிற்கு எதிராக எல்லையில் அழுத்தம் கொடுக்க ஒரு ஆயுதமாக பாகிஸ்தானை சீனா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
அதாவது சீனா இந்தியாவை திசை திருப்பவும் இந்திய அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவு படுத்தப்படாமல் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்து வருகிறது என கூறி இருக்கிறது. அதாவது ஒரு பெரிய அளவிலான போரை உண்டாக்காமல் எல்லையில் எப்பொழுதும் இந்தியாவுக்கு பிரச்சனை உண்டாகக் கூடிய வகையில் சீனா செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அண்மை காலமாக தான் இந்தியாவும் சீனாவும் நெருங்கி வர தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications