சீனாவில் மிகவும் அரிதான கனிம வளங்கள் உள்ளன. இதனால் அந்நாடு கனிம வளங்களை வைத்தும் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வார தொடக்கத்தில் சமாரியம், காடோலினியம் ,டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகிய 7 கனரக அரிய நில உலோகங்கள் மற்றும் சில அரிய நில காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது. காலியம், ஜெர்மானியம் மற்றும் ஆன்டிமனி போன்ற கனிமங்கள் ஸ்மாா்ட்போன்கள் முதல் ஏவுகணைகள் வரை பெரும்பாலான பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உலோகங்களுக்கு சீன இறக்குமதியை தான் பெரிய அளவில் நம்பி உள்ளன. இந்த சூழ்நிலையில், சீனாவின் இந்த தடை இந்திய எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இந்த உலோகங்கள் மற்றும் காந்தங்களை வாங்குவதற்கு சீனாவுக்கு மாற்றாக பிற நாடுகளை இந்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தெரிவித்தார்.

குருகிராமில் உள்ள மானேசரில் உள்ள விவிடிஎன் டெக்னாலஜியின் இயந்திர கண்டுபிடிப்பு பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சீனாவின் கனிமங்கள் ஏற்றுமதி தடை, அமெரிக்க துணை அதிபரின் இந்திய வருகை குறித்த கேள்விகளுக்கு அஸ்வனி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
அஸ்வனி வைஷ்ணவ் பதிலளிக்கையில், இதுவரை தொழில்துறையினருடன் நாம் என்ன விவாதித்து இருந்தாலும், கோவிட் தாக்கியதிலிருந்து முழு உலகமும் மதிப்பு சங்கிலிகளை பன்முகப்படுத்துவதற்கு தயாராகி வருவதால், இதற்கு மாற்று (சீனாவுக்கு மாற்றாக பிற நாடுகளில் கனிமங்கள் வாங்குவது) வழிகளை கண்டுபிடிக்க முடியும் என்று தொழில்துறையினர் கருதுகின்றனர்.
அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் வருகை, இந்திய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நேர்மறையான முடிவு கிடைக்கும். இதை நான் நல்ல நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஏனென்றால் நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் நடைமுறை ரீதியாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும் அணுகியுள்ளோம்.
மேலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதியில், இந்தியா மிகவும் நம்பகமான நாடாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுக் கொள்கையை கையாண்ட விதம், இன்று நம் நாட்டை பற்றிய அந்த நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது, அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய மற்றும் முக்கியமான காரணியாக இருக்கும். என்று தெரிவித்தார்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications