சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் என அரச ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாபெரும் கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் பல தசாப்தங்களில் காணாத நாட்டின் மிகச் சக்திவாய்ந்த தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரத்தில் ஜி ஜின்பிங் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும் நிலையில், இந்த நிலை மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா
சீனாவின் நலிந்த பொருளாதாரம், அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்து வருதல், ஜீரோ-கோவிட் கொள்கை மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் ஆகியவை ஜி ஜின்பிங் ஆதிக்கத்தை அந்நாட்டு அரசியலில் தடுமாறியது மறக்க முடியாது.
ஜி ஜின்பிங்
இந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் மாநாட்டில் ஜி ஜின்பிங் ஆதிக்கத்தை மீண்டும் தொடர மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராகப் பதவியேற்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்
சீனா தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது, சர்வதேச சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை நிரூப்பிக்க வேண்டி உள்ளது. இதேபோல் சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான தனது பிடியையும் உறுதி செய்ய ஜி ஜின்பிங் முக்கியமானவராக இருக்கிறார். மேலும் ஜி ஜின்பிங் சீனாவில் மாவோ பிறகு மிகவும் சக்திவாய்ந்த சீனத் தலைவராக இருக்கிறார்.
பொலிட்பீரோ முடிவு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட பொலிட்பீரோ அதாவது உயர்மட்ட நிர்வாகக் குழு திங்கட்கிழமை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி-யின் அறிக்கையின்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டம் இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமானதாக இருக்கு, இதற்கான ஏற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 16
அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டம் இந்த நிகழ்வில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2,300 கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் பெய்ஜிங்கிற்கு வந்து, சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்..
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications