மாட்டிகினாரு ஒருத்தரு.. சீனா ரியல் எஸ்டேட் ஜாம்பவான் Evergrande பங்குகள் 24% சரிவு..!!

சீனா, அமெரிக்க பொருளாதாரத்துடன் போட்டிப்போட தயாராக இருக்கும் ஒரே நாடு. ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்பு சீன பொருளாதாரத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளது என்றால் மிகையில்லை. சீன பொருளாதாரத்தில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரையிலான பங்கீட்டை கொண்ட ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறை மோசமான நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது.

சீன நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியமான எவர்கிராண்டே அளவுக்கு அதிகமான கடனை பெற்று அதை அரசுக்கும், மக்களுக்கும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தள்ளப்பட்டு இருக்கும் காரணத்தால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தை காப்பாற்ற சீன அரசு பல உதவிகளை செய்து வந்த நிலையில் தற்போது முட்டு சந்திற்கு வந்துள்ளது.

மாட்டிகினாரு ஒருத்தரு.. சீனா ரியல் எஸ்டேட் ஜாம்பவான் Evergrande பங்குகள் 24% சரிவு..!!

எவர்கிராண்டே நிறுவனம் கடந்த 18 மாதங்களாக சீன அரசின் நிதியுதவி உடன் மிகப்பெரிய மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எவர்கிராண்டே கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி அதன் மூலம் வர்த்தகத்தையும், நிறுவனத்தை காப்பாற்றி வந்தது.

இப்படியிருக்கையில் சீன அரசு தற்போது எவர்கிராண்டே நிறுவனத்தின் முக்கிய கிளை நிறுவனமான Hengda Real Estate Group-ஐ ஆய்வு செய்து வரும் வேளையில் புதிய கடன் பத்திரங்களை வெளியிடும் தகுதியை இழந்துள்ளது என அறிவித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் எவர்கிராண்டே நிறுவன பங்குகள் 24 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் சீன பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் Hengda Real Estate Group நிறுவனத்தில் போதுமான விபரங்களை குறிப்பாக உண்மையான நிலவரத்தை அரசுக்கும், மக்களுக்கும் தெரிவிக்காமல் ஏமாற்றியுள்ளதாக சந்தேகத்தின் பெயரில் விசாரணையை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது சீனாவின் எவர்கிராண்டே நிறுவனம் சுமார் 300 பில்லியன் டாலர் கடனில் தத்தளித்து வருகிறது, கடந்த 18 மாதங்களாக வாழ்வா சாவா என்ற போட்டியில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் வேளையில் இப்புதிய பிரச்சனையின் காரணமாக ஹாங்காங் பங்குச்சந்தையில் எவர்கிராண்டே நிறுவனத்தின் பங்குகள் 23.6 சதவீதம் சரிந்து 0.42 ஹாங்காங் டாலராக உள்ளது.

மாட்டிகினாரு ஒருத்தரு.. சீனா ரியல் எஸ்டேட் ஜாம்பவான் Evergrande பங்குகள் 24% சரிவு..!!

எவர்கிராண்டே நிறுவன பங்குகள் கொரோனா தொற்று காலத்தில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருக்கும் போது ஒரு பங்கு விலை 25.80 ஹாங்காங் டாலர் விலையில் இருந்தது தற்போது வெறும் 0.42 டாலருக்கு குறைந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் சீன அரசின் பல்வேறு உதவியின் காரணமாக எவர்கிராண்டே பங்குகள் 22.86 சதவீதம் உயர்ந்தது முக்கியமான விஷயம்.

சீன பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு இந்திய சந்தைக்கு சாதகமாக அமைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சர்வதேச முதலீட்டு சந்தையின் நிலவரம் மோசமாக உள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வு, பிரிட்டன் நாட்டின் ரெசிஷன் அச்சம் ஆகியவை இந்திய சந்தையை அதிகமாக பாதிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+